கூகுள், பேஸ்புக்கு வரிவிதிக்க இந்திய அரசு முடிவு.!
இதற்காக கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு வரிவிதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கான வழிமுறையை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் சேவையே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.

இதில் பெரும்பாலும் விளம்பரம் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் இருக்கின்றன.
இதற்காக கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு வரிவிதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கான வழிமுறையை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ்ஆப்:
இந்தியாவில் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட கணக்கு விவரங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. மேலும், இதில் ஏராளமான விளம்பரங்களும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயன்படுத்துவோர் எண்ணிக்கை:
இந்தியாவில் அக்டோபர் நிலவவரப்படி பேஸ்புக்கு 29.4 கோடி பயனாளர்களும், வாட்ஸ் ஆப்புக்கு கடந்த பிரப்ரவரி நிலப்படி 20 கோடி பயனாளர்களும் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

மத்திய அரசு சர்வே:
இந்நிலையில், இணைய நிறுவனங்கள் இந்தியா வாடிக்கையாளர் தொடர்பான விவரங்களை இந்தியாவில் உள்ள சர்வர்களிலேயே வைத்திருக்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

விரி விதிக்க முடிவு:
இது இந்தியர்கள் தொடர்பான விவரங்களை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி விளம்பரம் செய்தல், லைவ் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட அந்த நிறுவனங்களின் பல்வேறு சேவைகளுக்கு வரி விதிக்கவும் வகை செய்யும் என அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

ஆன்லைன் நிறுவனங்கள்:
பேஸ்புக், கூகுள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனகங்களுக்கும் இது பொருந்தும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications