மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி, துப்புரவு பணி செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்குப் பின்னால் என்ன நடந்தது என்று தெரியுமா? என்ற கேள்வியுடன் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த ஒரு புகைப்படம் வைரல் ஆகியது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படத்தின் பின்னால் உள்ள உண்மைத் தன்மை என்பதைப் பார்ப்போம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்தில் துப்புரவு பணிகளைச் செய்வது போன்ற புகைப்படத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் சிதம்பரம் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்.

குட்டி படப்பிப்பு யூனிட்
டிவிட்டரில் கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட புகைப்படத்தில், மோடி துப்புரவு பனி செய்த காட்சியை படம்பிடிப்பதற்கு என்று ஒரு குட்டி படப்பிப்பு யூனிட் பணியாற்றுவது போன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. மோடியின் புகைப்படத்திற்கு பின்னால், அவரை வைத்து ஷூட்டிங் நடந்தது போல அவர் கருத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் படு வேகமாக வைரல் ஆகத் தொடங்கியது.

புகைப்படத்தின் பின்னால் உள்ள உண்மை
இந்த புகைப்படத்தின் பின்னால் உள்ள உண்மையை ஆய்வு செய்தபோது தான், இந்த புகைப்படம் உண்மையில் மாமல்லபுரத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இந்த புகைப்படம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. ஆகையால் இது போலி புகைப்படம் என்பது உறுதியாகியுள்ளது.

கண்மூடித்தனமாகப் பகிர வேண்டாம்
தற்பொழுது கார்த்தி சிதம்பரம் மௌனம் காத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை நம்பி, அவற்றைக் ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாகப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. சில போலி செய்தியால் பலர் உயிரிழந்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications