ஸ்மார்ட்போனில் முழு கவனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்.!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இப்போது வரும் போன்களில் வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

மொபைல்போன் நிறுவனங்களும் மக்களை கவரும் வகையில் புதிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை தயாரித்த வண்ணம் உள்ளனர். பின்பு அதிநவீன ஸ்மார்ட்போன் வருவதால் இளைஞர்கள் முழு நேரம்
சமூகவலைதளங்களுக்குள் இருக்கின்றனர்.

அதன்படி அர்ஜெண்டினா தலைநகரான பியூனஸ் ஐரஸ்-ல் உள்ள ரயில் நிலையத்தில், கடந்த 13-ம் தேதி ஒரு சம்பவம்நடந்துள்ளது. அதாவது மொபைல்போனில் கவனத்தை வைத்திருந்த நபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டே
வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழ, அருகில் இருந்தவர்கள் அவரை உடனே காப்பாற்றினார்,அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் மொபைல்போன்களில் கவனம் மூழ்கி பொது இடங்களில் நடப்பது போன்றவற்றால், அதிகவிபத்துக்கள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் இந்தியாவிலும் செல்போனில் பாட்டு கேட்க்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள் ரயிலில் அடிபட்டுஉயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








