பேஸ்புக்கில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: 1வருடத்திற்கு பிறகு சிக்கினார்.
பின்பு டெல்லி நீதிமன்றம் இவருக்கு எதிராகப் பிணையில் வெளியில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது. மேலும் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹரி கிருண்ணா என்பவர் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம் எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், இவர் பெங்களூருவில் எம்.பி.ஏ. பட்டத்திற்கான ஒரு மேலாண்மைக் கல்லூரி நடத்தி வருகிறார். மருத்துவப் படிப்புக்கான பி.பார்மா கல்வி நிறுவனத்தையும் இவர் நடத்திவருவதாகத் தெரியவந்தது.

இந்நிலையில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரு மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் ஹரி கிருண்ணா கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

சைபர் பிரவு:
கடந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து ஊடக செயலாளர் புகார் கொடுத்ததன் பெயரில் ஹரி கிருண்ணா மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சைபர் பிரிவின் உதவி ஆய்வாளர் பானு பிரதாப் என்பவர் விசாணை செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்
பின்பு விசாரணையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி இவர் எழுதிய புத்தகத்திற்கு குடியரசு தலைவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதத்தை ஹரி கிருண்ணா வெளியிட்டதாக தெரியவந்துள்ளது.

தனது சுய விளம்பரத்திற்காகவும்
குறிப்பாக ஹரி கிருண்ணா தனது சுய விளம்பரத்திற்காகவும் இவர் எழுதியதாகக் கூறப்படும் புத்தகம் ஏராளமான வாசகர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் போலியான கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் இந்த வழக்கு விசாணையின் துவகத்தில் அமெரிக்காவில் ஹரி இருந்தார். பின்பு விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

நீதிமன்றம்
பின்பு டெல்லி நீதிமன்றம் இவருக்கு எதிராகப் பிணையில் வெளியில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது. மேலும் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்பு இவர் கைது
செய்யப்பட்டு புதுடெல்லியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் போலி கடிதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டஅவரது லேப்டாப் போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியில் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications