தேர்தலின் நேர்மையைக் காக்க பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு.!
இந்தியாவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, பேஸ்புக் நிறுவனம் தினமும் சுமார் பத்து லட்சம் போலி அக்கௌன்ட்களை அதிரடியாக நீக்கி வருகிறது.
இந்தியாவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, பேஸ்புக் நிறுவனம் தினமும் சுமார் பத்து லட்சம் போலி அக்கௌன்ட்களை அதிரடியாக நீக்கி வருகிறது.

போலி அக்கௌன்ட் நீக்கம்
மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு முறைகளைப் பயன்படுத்தி, பேஸ்புக் நிறுவனம் போலி அக்கௌன்ட்களை கண்டறிந்து உடனடி நீக்கம் செய்து வருகிறது. தற்பொழுது நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து அக்கௌன்ட்களும் போலி அக்கௌன்ட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலின் நேர்மையைக் காக்க அதிரடி நீக்கம்
இந்திய பொதுத் தேர்தலில் எந்தவித குளறுபடியும் இல்லாமல் இருக்க, தேர்தலின் நேர்மையைக் காக்க பேஸ்புக் நிறுவனம் பல உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அரசு குழுக்கள் நிறைந்த வல்லுநர்களுடன் இணைந்து போலி அக்கௌன்ட்களை நீக்கி வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் சந்தேகிக்கக்கூடிய அக்கௌன்ட்கள்
பேஸ்புக்கில் சந்தேகிக்கக்கூடிய நடவடிக்கைகள் நிறைந்த அக்கௌன்ட்கள் மற்றும் போலி செய்திகளைப் பரப்பும் அக்கௌன்ட்கள் என அனைத்து அக்கௌன்ட்களையும் பேஸ்புக் முடக்கி வருவதாக இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார்.

பத்து லட்சம் போலி அக்கௌன்ட் நீக்கம்
உலகம் முழுக்க உள்ள பல்வேறு குழுக்களுடன் இணைந்து, இந்திய பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த பேஸ்புக் நிறுவனம் கடந்த 18 மாதமாக பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் விதிகளை மீறியதாக சுமார் 700 பக்கங்கள், குரூப்கள் மற்றும் பத்து லட்சம் போலி அக்கௌன்ட்களை ஒரே நாளில் நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications