கருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.!
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைபலன் இன்றி இறந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருக
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த வாரம் இறந்தார். பல்வேறு பேராட்டங்களுக்கு பிறகு சென்னை அண்ணா சமாதி அருகே கருணாதியின் உடல் புதைக்கப்பட்டது.

இந்நிலையில், கருணாநிதியின் நினைவிடத்தில் ஜெர்மன் தொழில் நுட்பத்தின் கூடிய நிகழ்குடை அமைக்கப்படுகிறது.இந்த படங்களும் செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

கருணாநிதிக்கு சிகிச்சை:
உடல் நலம் குன்றியதால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பணியில் தலையிடாமல் மருத்துவர்கள் வேண்டுதலின்படி ஓய்வில் இருந்து வந்தார் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதி.
கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

கடந்த வாரம் இறந்தார்:
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைபலன் இன்றி இறந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டது.

நிலம் ஒதுக்கம்:
கருணாநிதி நினைவிடத்திற்காக 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் துருப்பிடிக்காத இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் தொழில் நுட்பத்தில் நிழற்கூரை:
கருணாநிதி நினைவிடத்தில் ரூ.4 லட்சத்தில் நிகழ்ற்குடை அமைக்கப்படுகிறது. இதற்காக புதுச்சேரியில் நிழற்குடை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

கட்சியினர் செலவு:
இதற்காக திமுக கட்சியினர் செலவு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அஞ்சலி செலுத்தவரும் தலைவர்கள், பொது மக்களுக்கு என தனித்தனி நடைபாதையும் அமைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications