Home
Social media

சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.!

சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்புலாமுனு இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.!

சந்திராயன்-2 விண்வெளிக்கு அனுப்புவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே முட்டுக்கட்டையாக இருந்தது. பிறகு பிஜேபி ஆட்சிக்கு வந்தது. சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேளுங்க இஸ்ரோ.!

இந்நிலையில், கடந்தாண்டே விண்வெளிக்கு சந்திராயன்-2 விண்வெளிக்கு செலுத்த இஸ்ரோ ஆயத்தமானது, அப்போது, முதல் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.
பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் பல்வேறு முறை சந்திராயன்-2 விண்கலன் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை எந்த நாடும் செய்யாத சாதனையும் இஸ்ரோ செய்ய இருக்கின்றது. நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ தரையிறக்க திட்டமிட்டுள்ளது.

2019ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது, நியூசிலாந்து-இந்தியா மோதினால், கட்டாயம் நியூசிலாந்த் வெல்லும். இறுதிப் போட்டியில், இங்கிலாந்த்- நியூசிலாந்த் அணிகள் மோதும் என்று கணித்தார் ஜோதிடர் பாலஜி. மேலும், புதிதாக ஒரு அணி கோப்பையை வெல்ல வாய்புள்ளது. நியூசிலாந்த் கோப்பையை வெல்லும் என்று கூறினார் ஜோதிடர் பாலாஜி.

இஸ்ரோ நிறுவனம் எந்த நேரத்தில், எந்த லக்கினத்தில், எந்த ராசியில் சந்திராயன்-2 விண்கலனை அனுப்ப வேண்டும் என்று ஜோதிடர் பாலாஜியிடம் கேட்டு விட்டு அனுப்பினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

1. உலக கோப்பை கிரிக்கெட் தொடர்:

1. உலக கோப்பை கிரிக்கெட் தொடர்:

2019ம் ஆண்டில் இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டிகள் நடந்தன. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்த், நியூசிலாந்த், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் மோதின.

இதில், இங்கிலாந்தில் மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் இந்த போட்டிகள் நடந்தன. இதில் 48 போட்டிகள் கொண்ட கொண்ட லீக் போட்டிகள் நடந்தன. மேலும், உலக ரசிகர்களின் ஆதரவும், உலக கோப்பை வெல்ல போட்டி போட்ட அணிகளின் உத்வேகமும் சிறப்பாக இருந்தது.

டிவி நிகழ்ச்சியில் ஜோதிடம்:

டிவி நிகழ்ச்சியில் ஜோதிடம்:

புது யுகம் தொலைக்காட்சியில், உலக கோப்பை தொடர் துவங்க சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்த், ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், இந்தியா உள்ளிட்ட அணிகள் இறுதி போட்டிக்குள் நுழைய போட்டி போட்டுக் கொள்ளும் என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சி அனைத்து தொலைக்காட்சியிலும், ஒளிப்பரப்பானது. இதை ஏராளமானோர் பார்த்தனர். அவர் கணித்த படியே இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. அதில், அவர் கணித்தபடி நியூசிலாந்த் அணி வென்றது.

பாலாஜி ஹாசன் கணிப்பு:

பாலாஜி ஹாசன் கணிப்பு:

உலக கோப்பை போட்டி 2019ல் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்த், நியூசிலாந்த், ஆஸ்திரேலியா அணிகள் கட்டாயம் தேர்வு ஆகும். இதில், இந்தியாவோடு நியூசிலாந்த், இங்கிலாந்த் அணிகள் மோதும். இதில் இந்தியாவோடு மோதினால், கட்டாயம் நியூசிலாந்த் அணி வெல்லும் என்று கணித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இறுதி போட்டியில், இங்கிலாந்த், நியூசிலாந்த் அணிகள் மோதிக் கொள்ளும் இதில், நியூசிலாந்த் அணி கட்டாயம் சாம்பியன் பட்டம் வெல்லும். மேலும், புதிதாக ஒரு அணி சாம்பியன் பட்டை வெல்லும். இது எல்லாம் கோள்களின் சஞ்சாரத்தின்படி கணிக்கப்பட்டது என்றார். மேலும், கேம் வில்லியம்சன் தான் மேன் ஆப்த மேட்சும் வாங்குவார் என்றும் கூறினார்.

எப்படி கணித்தார் தெரியுமா:

எப்படி கணித்தார் தெரியுமா:

தொழில்நுட்பத்தின் உதவியோடு கூகுள் வலைதளம், கிரிக்கெட் போட்டிகள் இத்தனை மணிக்கு துவங்கும். இத்தனை மணிக்கு போட்டிகள், டாஸ் இத்தனை மணிக்கு நடக்கும் என்று அதில் தெறிவிக்கப்படும். மேலும், டாஸ் வெல்லும் அணிகள் அடிப்படையில் போட்டிகளை கணித்துள்ளார்.

அவர் கணித்தது சரியாகத்தான் இருந்தது. கோள்களின் சஞ்சாரம், நேரம், அணிகளின் உடை நிறம் உள்ளிட்டவைகளையும் அடிப்படையில் துல்லியமாக கணித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.

இறுதிப் போட்டி கணிப்பு:

கட்டாயம் நியூசிலாந்த் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்றார். அதே போல போட்டியில் , 241 ரன்கள் எடுத்தது நியூசிலாந்த் அணி, பிறகு ஆடிய இங்கிலாந்த் அணியும் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 241 என்று எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. பிறகு சூப்பர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும், முதலில் ஆடிய இங்கிலாந்த் 15 ரன்களை எடுத்தது. பிறகு ஆடிய நியூசிலாந்த் அணியும் 15 ரன்கள் எடுத்தால், இதுவும் சமனில் முடிந்தது.

பிறகு, ஐசிசி அதிகமாக போட்டியில் பவுன்டரி (4ரன்) அடித்த்தால் இங்கிலாந்த் வெற்றி பெற்றதாக அறிவித்தது. புதிய அணி சாம்பியன். இதில் திருப்பம என்னென்றால், புதிதாக இங்கிலாந்த் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது.

இவர் கிட்ட நேரத்தை கேளுங்க இஸ்ரோ:

இவர் கிட்ட நேரத்தை கேளுங்க இஸ்ரோ:

இஸ்ரோ பல்வேறு முறை சந்திராயன் 2ஐ ஏவுவதை தள்ளிப்போட்டுள்ளது. ஸ்ரீ ஹரிகோட்ட விண்வெளி மையத்தில் கடைசியாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுவதை இஸ்ரோ நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு முறை கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டாலும், இறுதி நேரத்தில் நிறுத்தி வைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஒரு சிலர் சந்திராயன்-2 விண்கலனை ஏவுவதற்கு முன் ஜோதிடர் பாலஜியிடம் நேரத்தை கணிடித்து ஏவுகள் அவர் கூறினால், சரியாக இருக்கும் என்றும் கணித்தும் வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
isro consults astrologer balaji for chandrayaan 2 launch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X