ஏஞ்சலினாவாக ஆசைபட்டு கடைசியில் காஞ்சனா பேயாக மாறிய இளம்பெண்.!
ஏஞ்சலினா ஜூலியை போன்று மாற ஆசைப்பட்டு 50 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சைகள் செய்த பெண். தற்போது, காஞ்சனா பேய் போல உள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரைவல் ஆனது. இருந்தாலும், ஈரான் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஈரானை சேர்ந்த இளம்பெண் சாகார் தாபர் (19) காணும் போது, அவ்வளவு அழகாக இருப்பார். இவர் அமெரிக்கா நடிகை ஏஞ்சலினா ஜூலி போல தான் மாற வேண்டும் என விரும்பினார். ஏஞ்சலினா ஜூலியை போல தனது முகத்தை மாற்ற (முக மாற்று அறுவை சிகிக்சை ) செய்து கொண்டார். அவருக்கு திருப்தி கிடைக்கவில்லை. 50 முறை முக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பல்வேறு புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகின. இருந்தாலும், இவரது புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவரை சோம்பி என கூறிவருகின்றனர். ஆனால் கடைசியாக நம்ம ஊர் பட பாணியில் சொல்ல போனால், காஞ்சனா பேயாக மாறியுள்ளார் இந்த இளம் பெண். இருந்தாலும் தான் எடுத்த பல்வேறு விதமான புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அவரை பின்தொடரும் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளார். சாகர் தாபரின் முக லட்சணம் குறித்து நெட்டிசன்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இதில் அவரின் முகம் பிசாசு போலவும், பிணம் போலவும் காட்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏஞ்சலினா ஜூலியைப் போன்ற தனது பயமுறுத்தும் படங்களை வெளியிட்டதால், அவரை அவதூறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "கலாச்சாரம் மற்றும் சமூக சீர்கேடு மற்றும் தார்மீக ஊழல்" குற்றச்சாட்டுகளின் பேரில் சஹார் தபர் கைது செய்யப்பட்டார் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.






Click it and Unblock the Notifications