நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வீடியோவை பகிரங்கமாக வெளியிட்ட இந்திய விமானப்படை.! இது யாருக்காக ?
கடந்த வெள்ளிக் கிழமை இந்திய விமானபடையின் தேஜாஸ் போர் விமானம் திடீரென ஆய்வு மேற்கொண்டது. எப்போது நடந்தாலும் விமானப்படையின் ஆய்வுகளும் ரகசியமாகவே இருக்கும்.
இந்திய விமானப்படை தற்போது அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அவ்வபோது ஒரு சில சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இந்திய விமானப்படையின் சாகத்தை கண்டு பல்வேறு நாடுகளும் கதிகலங்கி போயியுள்ளனர்.

இந்நிலையில், அத்துமீறும் எதிரி நாடுகளையும் எதிர் கொள்ளும் துணிவு இருப்பது போல், தற்போது இந்திய விமானப்படையின் போர் விமானத்தில் நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஆய்வு:
கடந்த வெள்ளிக் கிழமை இந்திய விமானபடையின் தேஜாஸ் போர் விமானம் திடீரென ஆய்வு மேற்கொண்டது. எப்போது நடந்தாலும் விமானப்படையின் ஆய்வுகளும் ரகசியமாகவே இருக்கும்.

போர்க்களத்தில் நடப்பது போன்று:
போர்க்களத்தில் எரிபொருள் தீர்ந்தால், இலகு ரக போர் விமானமான தேஜாஸூக்கு இந்திய விமானப்படை IL-78 எம்ஐகே டாங்கரிலிருந்து பெட்ரோல் நிரப்பட்டது.
டுவிட்டரில் வெளியிட்டது:
இந்நிலையில் நடுவானில் பெட்ரோல் நிரப்பிய காட்சிகளை டுவிட்டரில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவது 13 நொடிகள் மட்டும் ஓடக் கூடியதாக இருக்கின்றது. இந்த காட்சிகளை பார்த்தவர்கள் விமானப்படையில் சாகத்தை பாராட்டியுள்ளனர்.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது:
தற்போது இந்திய விமானப்படையின் வசம் இருக்கும் இலகு ரக தேஜாஸ் போர் வினமானது. இந்தியாவின் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 2ம் தேதி தனது தேஜாஸ் சூலூர் விமானப்படை விமான தளத்தில் இருந்து முதல் ஆய்வை துவங்கியுள்ளது.

கலக்கத்தில் பாகிஸ்தான், சீனா:
தற்போது வெளியாகியிருக்கும் காட்சிகளை கண்டு பாகிஸ்தானும், சீனாவுக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படை எந்த நேரத்திலும் போர் நடந்தாலும் தயாராக இருப்பது போன்று ஒவ்வொரு செயல்பாடுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications