ஏடிஎம்மில் பணம் எடுக்கும் இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ: வைரல்.!
பேஸ்புக் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளங்களில் வரும் செய்திகள், தகவல்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் இந்த சமூகவலைத்தளங்களில் ஒரு சில வேடிக்கையான வீடியோக்கள் அதிக வைரல் ஆவதும் உண்டு.

அதன்படி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில்
அதிகமாக பரவி வருகிறது என்றே கூறலாம். குறிப்பாக சமூகவலைத்தளங்களில் வேடிக்கையான மற்றும் வித்தியசமான வீடியோக்கள்இப்போது அதிகம் வெளிவருகிறது. எனவே இதை கண்டு களிக்கும் இணையவாசிகள் சில வீடியோக்களை வைரலாக்கியும் வருகின்றனர்.
மேலும் இப்போது வெளிவந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் ஏடிஎம்-இல் பணம் எடுக்கிறார். அப்போது அவர் தன்னை மறந்து திடீரென குத்தாட்டம் போடுகிறார். குறிப்பாக ஏடிஎம் கார்டை செலுத்தும் போது, பின் நம்பரை அழுத்தும் போது, பணத்தை எடுக்கும் போது தொடர்ந்து தன்னை மறந்து நடனமாடுகிறார்.

அதேபோல் பணம் வரும் சந்தோஷத்தில் நடனம் ஆடும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. மேலும் ghantaa என்ற பயனரால் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இளம்பெண் ஏடிஎம் இயந்திரத்தின் முன்பு எதற்காக ஆடத் துவங்கினார் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் இருக்கும் பயனர்கள் அவருக்கு இது சம்பள நாளாக இருக்கும் என்றும், அதனால் தான் கையில் சம்பளம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் இப்படி நடனமாடுகிறார் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது. அதன்படி இந்த இளம்பெண் வீடியோ கூட அதிக வைரல் ஆகி உள்ளது.
குறிப்பாக இந்த சமூக வலைத்தளங்களில் தினசரி செய்திகள், தகவல்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக இதில் பயனுள்ள தகவல்களும் அதிகம் இருப்பதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதேபோல் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் ஒரு பொது கழிப்பறையிலிருந்து சிங்கம் வெளிவந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.அதாவது காட்டிற்குள் இருக்கும் கழிப்பறைக்கு இந்த சிங்கம் எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பொது கழிவறைக்குள் சிங்கம் இருப்பதை ஒரு பெண் சுற்றுலாப் பயணி கவனித்துள்ளார். இதனால் அவர் உடனடியாக அவரின் ஸ்மார்ட்போனை எடுத்து வீடியோ ரெக்கார்டிங் செய்யத் துவங்கியுள்ளார். நகரும் காரில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை வீடியோபதிவு தெளிவாகக் காட்டுகிறது.தற்போது இந்த வீடியோ கூட இணையதளத்தில் அதிக வைரல் ஆகி உள்ளது. மேலும், இது போன்ற பயனுள்ள தகவல் மற்றும் சுவாரசியமான தகவல்களுக்கு கிஸ்பாட் அணுகுங்கள்.


Click it and Unblock the Notifications