உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி அணிகள் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கணிப்பு.!
ஒவ்வொரு நாளும் போட்டிகள் குறித்து சமூக ஊடங்களிலும், மீஸ்ம்கள் மற்றும் கருத்துக்கள் பறக்கின்றன. இந்நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதுகுறித்து கருத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடங்களிலும்
12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது, இங்கிலாந்தில் நடந்து வருகின்றது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உட்பட 10 அணிகள் விளையாடுகின்றன.
தற்போது போட்டிகள் ஒவ்வொரு அணியும் விறுவிறுப்பாக மோதிக் கொள்கின்றன. இந்த போட்டிகளை காண இணையம், தொலைக்காட்சியிலும் அதிக ஆர்வத்தோடு போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் போட்டிகள் குறித்து சமூக ஊடங்களிலும், மீஸ்ம்கள் மற்றும் கருத்துக்கள் பறக்கின்றன. இந்நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதுகுறித்து கருத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடங்களிலும் வேகமாக பரவி வருகின்றது.
அந்த கருத்து எந்த அணிகள் இறுதி போட்டியில் விளையாடும் என்பதே, அவரின் கருத்து சரியானதாக இருக்குமா என்று பொறுத்து இருந்து பார்க்கதான் பார்க்க வேண்டும்.

உலக கோப்பை கிரிக்கெட்:
12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகின்றது. இதில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட்இன்டீஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.

11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள்:
மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் இந்த போட்டிகள் நடக்கின்றன. இதில் 48 போட்டிகள் கொண்டதாக இருக்கின்றன. இதில் பெரும்பான அணிகள் போட்டிகளில் விளையாடியுள்ளன. மேலும், இந்தியா-பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போட்டிகள் பகல் இரவு நேரங்களில் ஆட்டங்களில் விளையாட வகையில், லீக் சுற்றுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய புள்ளி பட்டியல்:
நியூசிலாந்து 4 போட்டிகளில் விளையாடி 3ல் வென்றுள்ளது. 1 போட்டி முடிவில்லை. முதல் இடத்தில் இருக்கின்றது.
ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் 3 வென்றுள்ளது. 1தோல்வியுடன் 2ம் இடத்தில் இருக்கின்றது.
இந்தியா 3 போட்டியில் 2 வெற்றி, 1 முடிவில்லை என 3ம் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 3 போட்டியில் 2ல் வெற்றி 1 தோல்வியுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 2 வெற்றியுடன் 5 வது இடத்தையும், ஸ்ரீலங்கா 1 வெற்றியுடன் 5வது இடத்தையும், வெஸ்ட்இன்டீஸ் 1 வெற்றியுடன் 6வது இடத்தையும், பங்களாதேஷ் 7 இடத்திலும், பாகிஸ்தான் 8 வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 9வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 10 இடத்திலும் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் தொடர்கின்றன.

இணையத்தில் பறக்கும் மீம்ஸ்கள்:
வெற்றி போட்டிகளுக்கும் இடையே அணிகள் குறித்து பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுடிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அணிகள் போட்டிகள் குறித்து கருத்துக்களாக மீம்ஸ்கள் பறக்கின்றன.
அபிநந்தனை போல சித்தரித்து, டீ நல்ல இருக்கு என்று இந்தியாவை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தான் சமூக ஊடங்களிலும் கேலி செய்து வந்தது.
இதற்கு பதிலடியாக இந்திய ரசிகர்கள் நீங்கள் ஒரு டீ கப்பை கூட வெல்ல முடியாது. இந்த அளவுக்கு உங்களின் மன நிலை உள்ளது என்று கிண்டல் செய்து டுவிட்டரிலும் பதிவேற்றம் செய்துள்ளனர் .

சுந்தர் பிச்சைக்கு விருது:
இந்நிலையில், அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் நடத்திய மாநாட்டில், கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு குலோபல் லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது.

நிருபர்கள் கேள்வி எழுப்பினர்:
அப்போது அங்கியிருந்த நிருபர்கள் சிலர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றது. விறுவிறுப்பான இடத்தையும் எட்டியுள்ளது. ஒவ்வொரு போட்டிகளும் அனல் பறக்கும் விதமாக இருக்கின்றது. இதில் எந்த இரு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று கேள்வியை எழுப்பினர்.

இறுதி போட்டியில் இந்த அணிகள்:
இதற்கு பதிலளித்த கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை இறுதி போட்டியில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோத வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சிறப்பாக விளையாடுவதாக தெரிவித்தார். தற்போது, இணையத்திலும், சமூக வலைதளத்தில் இந்த செய்தி வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications