மாரி பட டயலாக்: போலீஸ் ஸ்டேஷனுக்குபோய் கெத்தா டிக்டாக் செய்த 4இளைஞர்.!
போலீஸ் ஸ்டேஷக்குள் 4 இளைஞர்கள் கெத்தாக சென்று டிக்டாக் செய்தனர். பிறகு இந்த வீடியோவை அவர்கள் வாட்ஸ் ஆப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆனதால், போலீசார் 4 இளைஞரையும் கைது செய்து சிறப்பாக கவனித்துள்ளனர்.

தனுஸ் படம்:
நடிகர் தனுஷ் நடித்த படம் மாரி இந்த படத்தின் டயலாக்குதான் பரவலாக பேசப்பட்டது. "யார் இடத்துல வந்து யார் சீனனை போடறது. செஞ்சுடுவேன்". இந்த படத்தின் டயலாக்கு ஹிந்திலும் பிரலமாக இருக்கின்றது. டிக்டாக் வீடியோக்களிலும் அவ்வபோது, பரவலாக பேசப்படுகின்றது.

விசாரணைக்கு இழுத்து சென்ற போலீசார்
இந்நிலையில், குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், சிலர் சண்டை போட்ட குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சமந்தப்பட்ட 5 பேரை போலீசார் வழக்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அறையில் அமர வைத்த போலீசார்
அவர்களை காவல் நிலையத்திற்குள் ஒரு அறையில் போலீசார் அமர வைத்துள்ளனர். மற்றவர்களை மற்றொரு அறையில் அமர வைத்துள்ளனர். ஒரு சிலருடன் போலீசார் வழக்கு குறித்து விசாரித்துள்ளனர்.
டிக்டாக் வீடியோ
சமந்தப்பட்ட 5 பேரில் 4 பேர் காவல் நிலையத்திற்குள்ளே தனுஷின் மாரிபடத்தில் வரும் யார் இடத்தில் வந்து யார் சீனை போடறது. செஞ்சுருவன். இதை ஹிந்தியிலும் இந்த டயலாக் பிரபலமாக உள்ளது. இதை வைத்து அந்த இளைஞர்கள் டிக்டாக் செய்துள்ளனர். (ஹிந்தியில் எங்க ஏரியா. எங்க சட்டம். கொன்னுடுவேன் என்று அர்தமாம்).

வாட்ஸ் ஆப்பிலும் பரவியது
இந்த டிக்டாக் வீடியோ வாட்ஸ் ஆப்பிலும் பரவியது. அதுல் தாகூர், திலீப் தாகூர், அல்பேஷ் தாகூர், மகேந்திர தாகூர் ஆகியோர் குஜராத்தின் லக்னி தெஹ்ஸிலில் உள்ள ஆக்தலா காவல் நிலையத்திற்குள் பதிவு செய்யப்பட்டபோது இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

வழக்குபதிவு
அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் அந்த வீடியோவை டிக்டோக்கில் வெளியிட்டார், பேலீசார் கூறினர். ஐ.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் கைது செய்தது போலீஸ்
"வாட்ஸ்அப்பில் வீடியோவுக்கான இணைப்பை நாங்கள் பெற்றுள்ளோம். பின்னர் ஐபிசி பிரிவு 505 (பொதுவில் பயம் ஏற்படுத்தும் நோக்கம்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து திங்களன்று அவர்களை கைது செய்தோம்," போலீசார் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








