நிதானத்தில் இல்லாத போது பேஸ்புக் போஸ்ட் செய்ய முடியாதாம்...
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் செயற்கை நுண்ணறிவு முறையை செயல்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் பயனாளிகள் நிதானத்தில் இல்லாத சமயத்தில் அநாகரீகமான போஸ்ட்களை போடா முடியாமல் செய்ய முடியும்.

பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் யன் லீ-குன் கூறும் போது ஒரு நாள் செயற்கை நுண்ணறிவு முறை பயனாளிகள் மது அருந்தியிருக்கும் நேரத்தில் போஸ்ட் செய்யும் போது அவர்களை உஷார் படுத்தும் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
[2014 ஆம் ஆண்டின் கோல்டன் ட்வீட்]
மேலும் எதிர்கால செயற்கை நுண்ணறிவு பயனாளிகளின் உதவியாள் போன்று, நிச்சயம் இந்த போஸ்ட் போட வேண்டுமா, இதை உங்கள் தாய் உட்பட அனைவரும் பார்க்க கூடும் என்று எச்சரிக்கும் என்று லி-குங் தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் பயனாளிகள் சாதாரணமாக இருக்கும் போதும் மது அருந்திய பின்பும் எப்படி செயல்படுகின்றனர் என்ற வித்தியாசத்தை கொண்டு வேலை செய்யும்.


Click it and Unblock the Notifications