2019-தேர்தலுக்காக நல்லவனாக மாறிய பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்.!
சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாட்டுகளை ஆணையம் விதித்துள்ளது. இதற்கு அந்த நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் திருவிழா இந்தியாவில் நடக்கிறது.
ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரை நடக்கின்றது. இது தேர்தல் திருவிழாவை போல இந்தியா முழுவதும் நடக்கும்.

இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாட்டுகளை ஆணையம் விதித்துள்ளது. இதற்கு அந்த நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

சமூக வலைதளங்கள்:
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், யூடியூப், இன்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன.
இதில் தேர்தல் நேரத்தில் கட்சி சார்ந்து வாக்கு பெற இதை பயன்படுத்தவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை வகுத்தது.

48 மணி நேரம் நீக்கப்படும்:
அதன்படி 48 மணி நேர காலத்தில் சமூக வலைதளங்களில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்ககோரும் பதிவுகளை மூன்று மணி நேரத்தில நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

தேர்தல் ஆணையத்துடன் ஒப்புந்தம்:
இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் நடந்த சந்திப்பில் கையெழுத்தானது.

பொதுத் தேர்தல்
பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடக்கிறது. தேர்தல் துவங்க 48 மணி நேரத்திற்கு முன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது அனைத்து விதிகளும் அமலில் இருக்கும், இதனால் பரப்புரைகளுக்கு தடையும் இருக்கும்.

சிறப்பு கூட்டம்:
தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் வாட்ஸ் ஆப், கூகுள், ஷேர்சாட், மற்றும் டிக்டாக் போன்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

3 மணி நேரத்திற்குள் நீங்குவதாக உறுதி:
சமூக வலைதளங்கள் அனைத்தும் சின்கா கமிட்டி பரிந்துரையின் படி சட்டத்திற்கு புறம்பானதாக மேற்கொள் காட்டப்படும் பதிவுகளை 3 மணி நேரத்திற்குள் நீங்குவதாக உறுதியளித்துள்ளன. சட்டபிரிவு 126ன் படி தேர்தல் நாளுக்கு முன் 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்ய தடை இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








