Home
Social media

சிறுமி தற்கொலையை தடுத்த பேஸ்புக்: சுவாரசியமான தகவல்.!

இன்றைய சமூக வலைதளங்கள் சமூகத்தின் சிந்தனைக்கும், மாற்றத்திற்கும் பெரிதும் உதவி வருகின்றது. சமூக வலை தளங்களில் ஒரு கருத்தை நாம் பதிவிடும் போது, அது மற்றவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகவும் அமைகிறது.

By Rajivganth Gurusamy

இன்றைய சமூக வலைதளங்கள் சமூகத்தின் சிந்தனைக்கும், மாற்றத்திற்கும் பெரிதும் உதவி வருகின்றது. சமூக வலை தளங்களில் ஒரு கருத்தை நாம் பதிவிடும் போது, அது மற்றவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகவும் அமைகிறது.

 சிறுமி தற்கொலையை தடுத்த பேஸ்புக்: சுவாரசியமான தகவல்.!


ஒரு சில கருத்துகள் அடுத்துவர்களையும் புண்படுத்தும். சமூக வலை தளங்களில் நன்மையான கருத்தும், தீமையான கருத்தும் உலா வருவது வழக்கமே. நாம் பதிவிடும் கருத்துக்களை வைத்தே நன்மையான தீமையானது என தீர்வும் கிடைத்து விடுகிறது.

சமூகத்திற்கான வளர்ச்சி:

சமூகத்திற்கான வளர்ச்சி:

சமூக வலைதளங்கள் இன்றைய உலகில் சீர்திருத்த வாதிகளை போலும் உருவெடுத்துள்ளது. தனி மனிதன், சமூகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு வகையான வளர்ச்சிகளுக்கும் சமூக வலை தளங்கள் பெரிதும் உதவி புரிகின்றது. தனி மனிதன் முதல் சமூகம் வரை அனைத்து தரப்பினரின் குறைகளையோ இல்லை நிறைகளையே சுட்டிக் காட்டுவதாக அமைகின்றது. இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் இல்லை என்றும் கருத்து மோதல்களை உருவாக்குவது பஞ்சம் இருக்காது.

குற்றங்களையும் தடுக்கும்:

குற்றங்களையும் தடுக்கும்:

குற்றம் நடந்தாலோ இல்லை நடப்பதாக இருந்தாலும் சரி இதுதொடர்பான புகைப்படம், வீடியோ, கார்ட்டூன் (கருத்து சித்திரம்), எழுத்து வடிவம், ஆடியோ, நேரலையும் இருப்பதால் போன்றைவைகள் பகிரப்படுகிறது. இக்கருத்துக்கள் மேலும் குற்றங்கள் நடக்காமல் உடனே தடுக்கின்றது. மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரிதும் உதவிபுரிகிறது. பல்வேறு நிறை குறைகளையும் சரி செய்ய உதவுகிறது.

பேஸ்புக் உதவி:

பேஸ்புக் உதவி:

அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதால், உலகமே கிராமம் போல் பேஸ்புக் மாறியுள்ளது. தற்கொலைகளை தடுக்கிறது. பிரிந்தவர்களையும் மீட்க முடிகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. உடலுறுப்பு, ரத்ததானம் செய்ய முடிகிறது. நட்புறவுகளை உருவாக்கிறது. குற்றங்களையும் தடுத்து, குற்றவாளிகளையும் காட்டியும் கொடுத்த சம்பவங்கள் பேஸ்புக்கால் அரங்கேறுகிறது என்றால் மட்டும் மிகையாகாது.

பேஸ்புக்கில் தற்கொலை அறிவிப்பு:

பேஸ்புக்கில் தற்கொலை அறிவிப்பு:

அஸ்ஸாம் மாநில தலைநகர் கவுஹாத்தியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பேஸ் பக்கத்தில் தான் தற்கொலை செய்ய போவதாக பதிவு செய்திருந்தார். இதை கவனித்த பேஸ்புக் நிர்வாகம். இதுகுறித்து தலைமையகத்தில் இருந்து மாநில காவல்துறைக்கு தகவல் அளித்தது.

தடுக்கப்பட்டது:

தடுக்கப்பட்டது:

தகவலறிந்த அசாம் டிஜிபி குலாதார் சையிகா தலைமையிலான குழுவினர் உடனடியாக சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டனர். பிறகு சிறுமியை அழைத்து சமாதானமும் செய்து, அந்த பதிவையும் நீக்க வைத்தனர். இந்த பேஸ்புக்கால் விரைவாக நடக்க இருந்த தற்கொலை சம்பவமும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Facebook alerts Assam police, helps prevent suicide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X