பேஸ்புக் விளம்பர விபரீதம்: கர்ப்பிணியை கொன்று சிசுவை எடுத்த 3 பேர்.!
அப்போது, குழந்தைகக்காக ஆசைப்பட்ட அவர்கள் கர்ப்பிணியை கொன்று சிசுவை உயிரிருடன் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து துணி வாங்க சென்றுள்ளார் கர்ப்பிணி ஒருவர்.
அப்போது, குழந்தைகக்காக ஆசைப்பட்ட அவர்கள் கர்ப்பிணியை கொன்று சிசுவை உயிரிருடன் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது மக்களிடையே இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

19 வயது பெண்:
அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த 1ஒசாவோ லோபஸ் (19) . இவர் 9 மாத கர்ப்பிணியான இவர் கடந்த மாதம் காணமல் போனார்.
இவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத ஒசாவோ லோபஸ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

குழந்தைகக்கு ஆடை-பேஸ்புக் விளம்பரம்:
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதில் குழந்தைகளுக்கு ஆடை கொடுக்கப்படும் என்று பேஸ்புக் விளம்பரத் பார்த்து ஒசாவோ லோபஸ் சென்ற போது அங்கு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

3 பேர் கைது :
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கிளாரிசா (46), டிசைரி (24) , கிளாரிசாவின் 40 வயதுடையை ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். ஒசாவோ லோபஸின் வயிற்றில் இருந்து குழந்தை எப்படி எடுக்கப்பட்டது என்று விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
குழந்தை தன்னுடையது என்று டிசைரி உரிமை கொண்டாடியுள்ளார். டிஎன்ஏ சோதனையில் அது ஒசாவோ லோபஸின் குழந்தை எனத் தெரியவந்துள்ளது.

குழந்தை ஒப்படைப்பு:
பிறகு மீட்கப்பட்ட குழந்தை ஒசாவோ லோபஸின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு யாடியல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தற்போது யாடியல் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications