Just In
- 57 min ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 2 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 2 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 3 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.!
ஆவணப்பட இயக்குனர் ஜஸ்டின் சல்லிவன் கைப்பற்றிய ஆப்பிரிக்க யானையின் பேரழிவை உணர்த்தும் புகைப்படம் ஒன்று போட்ஸ்வானாவில் வேட்டையாடுவதன் சோகமான யதார்த்தத்தைக் வெளிக்காட்டுவதோடு இணையத்திலும் வைரலாகியுள்ளது.
ஆப்பிரக்காவின் தென் பகுதியில்...
ஆப்பிரக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு போட்ஸ்வானா, இங்கு யானைகள் அதிகமாக வேட்டையாடப்பட்டு வருகிறது, மேலும் சமீபத்தில் அங்கு வேட்டையாடப்பட்ட யானை ஒன்றின் புகைப்படம் தறசமயம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியுள்ளது.
கண்களில் கண்ணீர் நிறைகிறது
குறிப்பாக போட்ஸ்வானாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த யானை தந்தத்திற்கான தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது, இந்த புகைப்படத்தில் வறண்ட அந்தக் காட்டின் நடுவே யானை
ஒன்று தலை வெட்படப்பட்டுப் படுத்திருக்கும் காட்சியைப் பார்பவர் கண்களில் கண்ணீர் நிறைகிறது.
விண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்! வியக்கவைக்கும் புகைப்படங்கள்.!
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
வலைத்தளங்களில் வைரலாகும் இந்த புகைப்படம் ஆணட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டிக்கும் தேர்வு
செய்யப்பட்டுள்ளது, வேட்டையர்களின் கோர முகத்தை விவரிக்கும் இந்த புகைப்படத்திற்கு வனவிலங்கு பாதுகாவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தடை விலக்கிக் கொள்ளப்பட்டது
போட்ஸ்வானாவில் சமீபத்தில்தான் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடைக்கு முன்னரும் போட்ஸ்வானாவில் கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேலான யானைகள் கொல்லப்பட்டன.
சமூக வலைதளங்களில்..
தற்போது ஜஸ்டின் எடுத்த இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றனர்.
64 மெகா பிக்சல் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்!
ட்ரோன் கேமிரா
இது குறித்து ஜஸ்டின் சல்லிவன்; கூறுகையில், "அந்த இடத்தில் ஒரு யானை கொல்லப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதை பதிவு செய்வதற்கு அங்கே சென்றேன். அங்கே ட்ரோன் கேமிராவை பறக்கவிட்டபோது இந்த போட்டோ பதிவானது. இந்த போட்டோவுக்கு ‘டிஸ்கணக்ஷன்' என்று தலைப்பிட்டிருக்கிறேன். இந்த காட்சியை உயரத்தில் இருந்து பார்த்தால்தான் அதனுடைய
உண்மையான வலியை உணர முடியும். டிஸ்கணக்ஷன் (துண்டிப்பு) என்றால் துண்டிக்கப்பட்டது யானையின் தும்பிக்கை மட்டுமல்ல. துண்டிக்கப்பட்டிருப்பது மனித இனத்தின் சூழலும்தான்" என்று உருக்கமாக கூறுகிறார்.
கடந்த மாதம்தான் நீக்கினார்
தந்தத்திற்காக இப்படி கொடூரமாக ஒரு யானை வேட்டையாடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடானபோட்ஸ்வானாவில், வைர சுரங்கத்துக்கு அடுத்து அதிக வருமானம் கிடைப்பது சுற்றுலாத்துறையில்தான். அந்த நாட்டில் உள்ள வன உயிரினங்களைக் கான பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில்தான், அந்த நாட்டில் வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை
சேதப்படுத்துவதாக விவசாயிகள் முறையிட்டதன் பேரில் போட்ஸ்வானா அதிபர் மோக்வீட்சி மசிசி ஐந்து ஆண்டுகளாக இருந்த யானை வேட்டை தடையை கடந்த மாதம்தான் நீக்கினார்.
வனத்தின் நடுவில் அப்படியே விட்டுச் செல்கின்றனர்
இதனைத் தொடர்ந்துதான் இந்த யானை வேட்டையும் அங்கே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. யானை வேட்டைக்காரர்கள் யானையைக் கொன்றபின் ரம்பத்தால் அதன் தும்பிக்கையை அறுத்து துண்டித்தபின் தந்தங்களை எடுத்துக்கொண்டு யானையின் உடலை வனத்தின் நடுவில் அப்படியே விட்டுச் செல்கின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470