கைதிகள் சிறையில் அடைக்கப்பட்ட பறவை! காரணம் என்ன தெரியுமா?
டச்சுக்காரர்கள் சகிப்புத்தன்மையுடனும் அனைவரையும் சமமாக நடந்துவதில் பெயர் பெற்றவர்கள். அவர்களுக்கான தனிப் பெருமையாகவே இது கூறப்பட்டுவருகிறது. இருப்பினும் எல்லா நேரங்களிலும் அனைவரையும் சமமாக நடத்த முடியாது அல்லவா? இது மனிதர்களுக்கு மட்டுமில்லை பறவைகளுக்கும் கூட பொருந்தும்.

பறவை கைது
டச்சில் உள்ள உட்ரெச்சில் கடை திருட்டு வழக்கு ஒன்றில் தனது உரிமையாளருடன் ஒரு பறவை கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட உரிமையாளரை போலீசார் விசாரிக்கும் வரையில், அவருடைய பறவையையும் போலீசார் கைதிகள் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
வைரல் ஆனா இன்ஸ்டாகிராம் பதிவு
இதற்கான காரணத்தையும் உட்ரெச்சில் போலீசார் விளக்கியுள்ளனர். கைதிகள் சிறையில் அடைக்கப்பட்ட பறவையின் புகைப்படத்தை உட்ரெச்சில் போலீசார் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பறவையின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

கைதியின் செல்லப்பிராணி
கடை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கைதியின் செல்லப்பிராணி தான் இந்த பறவை. போலீசார் அவரை கைது செய்ய முயன்ற பொது அவரின் தோளில் அமர்ந்து போலீசார் முறைத்துப் பார்த்துள்ளது. கைது செய்யப் போன போலீசாரிடம் பறவை கூண்டு இல்லாத காரணத்தினால் கைதியுடனே பறவையை ஜெயிலிற்கு அழைத்து வந்துள்ளனர்.

பிரட் சாண்ட்விச்சுடன் சிறையில் அடைப்பு
விசாரணை துவங்குவதற்கு முன், பறவை உரிமையாளரின் அனுமதியுடன் அருகிலிருந்த கைதிகள் சிறையி லிந்த பறவை ஒரு டம்பளர் தண்ணீர் மற்றும் பிரட் சாண்ட்விச்சுடன் அடைக்கப்பட்டுள்ளது. கேளிக்கையாக இந்த நிகழ்வை உட்ரெச்சில் போலீசார் படம்பிடித்து அதை இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளனர்.

கேளிக்கையாக போலீசார் செய்த காரியம் வைரல்
விசாரணைக்குப் பின், சிறிது நேரத்தில் பறவையின் உரிமையாளர் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவருடைய செல்லப்பிராணியும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் இந்த பறவை காரணமில்லை என்பதினால் எந்த கேள்விகளையும் நாங்கள் பறவையிடம் கேட்கவில்லை என்று கேளிக்கையாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications