Home
Social media

ஆண்டின் சிறந்த விருது இவருக்கு: பேஸ்புக் காதலனை மணக்க தாயை கொன்ற மகள்.

இந்த ஆண்டின் தலைசிறந்த விருது யாருக்கு என்றால் இவர் தான் இந்த விருதை தட்டிச் செல்கின்றார். ஏன் தெரியுமா ? கடந்த 19 ஆண்டாக வளர்ந்து வந்த தாயை கூலி படை மூலம் ஏவி கொலை செய்த வீரமங்கை என்ற பட்டத்தை தட்டி

இந்த ஆண்டின் தலைசிறந்த விருது யாருக்கு என்றால் இவர் தான் இந்த விருதை தட்டிச் செல்கின்றார். ஏன் தெரியுமா ? கடந்த 19 ஆண்டாக வளர்ந்து வந்த தாயை கூலி படை மூலம் ஏவி கொலை செய்த வீரமங்கை என்ற பட்டத்தை தட்டிச் செல்கின்றார்.

பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரை செல்போன் மூலம் பல மணி நேரம் சேட்டிங் செய்த இவர், தாய் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், ஓரே அடியாக தாயை கூலி படை மூலம் ஏவிக் கொன்ற தமிழகத்தின் ஒரு தலைசிறந்த தங்க தாரகையே இவர்.

ஆண்டின் சிறந்த விருது இவருக்கு: பேஸ்புக் காதலனை மணக்க தாயை கொன்ற மகள்.

இது போன்ற பெண்களை பெற்று எடுத்துக்காக நாம் விருதும், தனியாக பாராட்டு விழாவே நடத்தலாம். யாரே என்று தெரியாத நபரை கரம் பிடிக்க ஈ, எறும்பு கடிக்காமல் வளர்ந்த்த தாயை கொல்வது சிறந்த தர்மம் போல் தான் தெரிகின்றது.

பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொண்டுக்காமல் வளர்த்த தாயுக்காக, கிடைத்த மிகப்பெரிய பரிசு தான் இது. காதலனை மணக்க கூடாது என்று பெற்றோர்கள் கொலை செய்தால், அது ஆணவக் கொலையாகும். அதே பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை கொலை செய்தாலும் ஆணவக் கொலை தான் என்பதை மறுக்கவும் கூடாது.

இதுவும் ஆணவக் கொலை என்று சொல்ல ஒருவர் கூடவரவில்லை என்பது தான் மிகக் கொடிய விஷயம்.

19 வயது கல்லூரி  மாணவி:

19 வயது கல்லூரி மாணவி:

திருவள்ளூர் மாவட்டம் காக்ளூர் ஆஞ்சனேயபுரத்தை சேர்ந்த திருமுருகன்-பானுமதியின் இளைய மகள் தேவிப்பிரியா (19). கல்லூரி மாணவி.

செல்போன் உடன்  வலம்  வந்தார்:

செல்போன் உடன் வலம் வந்தார்:

ஆவடியில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு வணிகவியல் படித்து வந்தார் தேவிப்பிரியா, இவர் செல்போனுடன் வலம் வந்தார்.
முகநூலில் பல மணி நேரம் சாட்டிங் செய்வார். இதை தாய் பலமுறை கண்டித்துள்ளார்.

பேஸ்புக்கில் அறிமுகமான காதலன்:

பேஸ்புக்கில் அறிமுகமான காதலன்:

கும்பகோணத்தை சேர்ந்தவர் விவேக் என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளார். இவர் மைசூரில் பணியாற்றி வருகின்றார். அவரை நேரில் பார்க்காமல் காதலித்து வந்துள்ளார். தேவிப்பிரியா. விவேக்கை திருமணம் செய்வதாகவும் தனது தாயிடம் தெரிவித்துள்ளார் தேவிப்பிரியா.

தாய் எதிர்பால் செல்போன் பறிப்பு:

தாய் எதிர்பால் செல்போன் பறிப்பு:

இதுபோன்ற பசங்களை நம்பாதே என்று தேவிப்பிரியா விடம் தாய் பானுமதி கூறியுள்ளார். பல மணி நேரம் சேட்டிங் இருப்பதால் படிப்பு கெட்டுப்போகும் என்று தேவிப்பிரியாவின் செல்போனையும் தாய் பறித்து வைத்துக் கொண்டார்.

பிறகு, அழுது அடம் பிடித்து, தாயிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொண்டார் தேவிப்பிரியா.

 தாயை கொல்ல சதித் திட்டம்:

தாயை கொல்ல சதித் திட்டம்:

இதையடுத்து காதலுக்கு தடையாக இருக்கும் தாயார் பானுமதியை தீர்த்துக்கட்ட காதலன் விவேக் உடன் சேர்ந்து தேவிப்பிரியா திட்டம் தீட்டியதாக கூறப்படுகின்றது. அதன்படி கும்பகோணத்தில் இருந்து காதலன் விவேக்கால் அனுப்பிவைக்கப்பட்ட கூலிப்படையை சேர்ந்த இருவர் காக்களூர் வந்து தேவிபிரியாவை சந்தித்துள்ளனர். அப்போது அவர் தனது தாயை இருவருக்கும் அடையாளம் காட்டி உள்ளார்.

பானுமதி கொல்ல  ஆயத்தம்:

பானுமதி கொல்ல ஆயத்தம்:

இதனை பார்த்த தாய் பானுமதியிடம் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் என கூறி தேவிப்பிரியா சமாளித்துள்ளார். வீட்டில் அவரது சகோதரி இருந்ததால் உடனடியாக தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் காத்திருந்துள்ளனர். சிறிது நேரத்தில் வீட்டில் ஓய்வெடுக்க சகோதரி படுக்க அறைக்கு சென்று விட வீட்டின் ஹாலில் தனியாக அமர்ந்திருந்தார் பானுமதி.

தாயின் கழுத்தை நெறித்த மகள்:

தாயின் கழுத்தை நெறித்த மகள்:

அப்போது முன்வாசல் வழியாக புகுந்த கூலிப்படையை சேர்ந்த இருவரையும் பார்த்து பானுமதி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து வீட்டிற்குள் நின்ற மகள் தேவிப்பிரியா தாய் பானுமதியின் கழுத்தை நெரித்துள்ளார். அவர் எடுத்து கொடுத்த கத்தியை பெற்ற கூலிப்படையை சேந்த இருவரும், பானுமதியை சரமாரியாக குத்தினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தேவிப்பிரியாவின் சகோதரியையும் கழுத்தை பிடித்து தள்ளிவிட்டு சுவர் ஏறிக்குறித்து பின்பக்கமாக தப்பி ஓடினர்.

 கொலை செய்து தப்பிய கூலிப்படை:

கொலை செய்து தப்பிய கூலிப்படை:

வெளியூர் கூலிப்படையினர் என்பதால் ஊரை விட்டு வெளியேற வழி தெரியாமல், அங்கு கிரிக்கெட் விளையாண்ட இளைஞர்களிடம் வழி கேட்க கையில் ரத்தகறையுடன் ஓடி வந்த 2 இளைஞர்களையும் பிடித்து அடித்து விசாரித்த போது கொலை செய்து விட்டு தப்பி வந்தது தெரியவந்தது.

திமிராக வாக்கு மூலம் அளித்தார்:

திமிராக வாக்கு மூலம் அளித்தார்:

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பானுமதி பரிதாபமாக பலியானார். இதையடுத்து தேவிப்பிரியாவை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தேவிப்பிரியாவோ தனது தாயை கொலை செய்து விட்டோமே என்ற சிறு பதற்றமும் இல்லாமல் திமிராக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பெற்றோர் கண்டிக்க வேண்டும்:

பெற்றோர் கண்டிக்க வேண்டும்:

செல்போனை அதிக நேரம் பயன்படுத்தும் பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் இதுபோன்று விவரீத முடிவுகள் தான் நிகழும்.

Best Mobiles in India

English summary
Daughter who killed her mother for love of Facebook : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X