காவல் அதிகாரியை தண்ணீர் பாட்டிலால் தாக்கிய பெண்.! வைரல் வீடியோ.! ஏன் தெரியுமா?
போக்குவரத்துக்குக் காவலாளியைச் சத்தமிட்டு அவதூறான வார்த்தைகளில் திட்டத் துவங்கிய பெண், கையிலிருந்த பாட்டிலால் காவல் அதிகாரியை தாக்கி இருக்கிறார்.
சட்ட ஒழுங்கையும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் பாதுகாக்க டெல்லி போக்குவரத்துக்கு காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததினால் ஏகப்பட்ட சட்ட மீறல்கள் மற்றும் விபத்துகள் நடைபெற்று வருகிறது.

தம்பதியினரை காவல்துறையினர் விசாரணை
டெல்லியில் உள்ள கிஷன்கர் பகுதியில் வாகன சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ஒரு ஆன் மற்றும் பெண்ணை காவல்துறையினர் வழிமறித்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

போக்குவரத்துக்குக் காவலாளியை தாக்கிய பெண்
காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், தம்பதியினர் இருவரும் சண்டையிடத் துவங்கியுள்ளனர். போக்குவரத்துக்குக் காவலாளியைச் சத்தமிட்டு அவதூறான வார்த்தைகளில் திட்டத் துவங்கிய பெண், கையிலிருந்த பாட்டிலால் காவல் அதிகாரியை தாக்கி இருக்கிறார்.

பில்லிங் இயந்திரம் உடைந்து சேதம்
பெண்ணின் ஆத்திர செயலை கட்டுப்படுத்த முயன்ற இரண்டு காவல் அதிகாரிகளின் மீது ஆன் நபர் சண்டையிடம் துவங்கி இருக்கிறார். சண்டையில் போக்குவரத்துக்கு அதிகரின் பில்லிங் இயந்திரம் உடைந்து சேதமடைந்துள்ளது.

14 நாள் சிறை தண்டனை
சட்ட ஒழுங்கை பாதுகாக்க முயன்ற காவல் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அரசு இயந்திரத்தைச் சேதப்படுத்தியது என்று மூன்று வழக்குகளில் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டு 14 நாள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வைரலாகும் வீடியோ
காவல் அதிகாரிகளைத் தாக்கிய இந்த இருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








