பேஸ்புக்கில் பழகி சிறுமியிடம் 50சரவன் நகை அபேஸ்:பலே கில்லாடிக்கு போலீஸ் குறி.!
சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி சிறுமி ஒருவரிடம் 50 சரவன் நகைசை ஆசாமி ஒருவர் அபேஸ் செய்துள்ளார். மேலும் அவர் நகைகையுடன் மாயமாகியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் போரில் போலீசார் அந்த பலே ஆச
சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி சிறுமி ஒருவரிடம் 50 சரவன் நகைசை ஆசாமி ஒருவர் அபேஸ் செய்துள்ளார்.
மேலும் அவர் நகைகையுடன் மாயமாகியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் போரில் போலீசார் அந்த பலே ஆசாமிக்கு குறி வைத்துள்ளனர்.
மேலும், இதுபோன்று எத்தனைபேரை ஏமாற்றியுள்ளார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். மேலும், சைபர் கிரைம் போலீசாரும் இது குறித்து துரித நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.

பேஸ்புக் குற்றம்:
நமக்கு யார் என்றே தெரியாமல் பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகம் ஆகின்றனர். அவர்களை நம்பி நாம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றோம். இதனால் நமக்கு ஆபத்தில் கூட முடியலாம் என்பது தற்போது நடக்கும் சம்பவங்கள் நல்ல எடுத்துக் காட்டு.
பொள்ளாச்சி பாலியல் குற்றம் முதல் கொலை, கொள்ளை, கற்கழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் பேஸ்புக் மூலம் பழகுவதாலும் ஏற்படுகின்றது என்பது நிதர்சனமாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த சிறுமி:
சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் பேஸ்புக்கை அதிமாக பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு ஏராளமான நண்பர்கள் ரெக்கியுஸ்ட் கொடுத்துள்ளனர். அந்த சிறுமி அவர்களை நண்பர்ளாக்கியுள்ளார்.

சிறுமியை மயக்கி ஆசாமி:
அந்த சிறுமி போடும் போஸ்டுகளுக்கு ஒரு ஆசாமி பின் தொடர்ந்துள்ளார். மேலும், அந்த ஆசாமி லைக்குகளையும் அள்ளி கொடுத்துள்ளார். பிறகு, நீ அழகாவும் இருக்கின்றாய் என்று ஆசை வார்த்தைகளையும் கூறி மயங்கியுள்ளார்.

செல்போன் எண்கள் பரிமாறியுள்ளனர்:
பிறகு நாளைடையில் அந்த சிறுமிக்கு இவர் மீது நம்பிக்கை ஏற்பட இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதில் மணிக் கணக்கில் பேசியும், வாட்ஸ் ஆப் மூலம் சேட்டிங் செய்தும் நெருங்கியவர்களாகி கொண்டனர்.
மேலும் அந்த சிறுமியிடம் தனத பெயர் உமர் பரூக் என்றும் கூறியுள்ளார்.

50 சவரன் நகை அபேஸ்:
அந்த சிறுமியிடம் நைசாக பேசி உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன். நான் சொந்த தொழில் துவங்க வேண்டும். உன்னிடம் உள்ள நகைகளை கொடு என்று படிப்படியாக 50 சவரன் நகையை வாங்கியுள்ளார். மேலுமு; திரும்பி தருவதாகவும் சிறுமியிடம் உறுதி கூறியுள்ளார்.

உமர் மாயம்:
இந்நிலையில், உமர் செல்போன், பேஸ்புக் ஆகியவை செயல்பாடு இல்லாமல் இருந்துள்ளது. மேலும், வீட்டில் நகை காணாததால், சிறுமியிடம் விசாரித்த போது, இந்த விவரம் தெரியவந்துள்ளது.

போலீல் புகார்:
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சென்னை வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளித்தனர். செல்போன் மற்றும் பேஸ்புக் ஐடியை வைத்து போலீசார் அந்த உமருக்கு குறி வைத்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் பலரை ஏமாற்றினார்?
இதேபோல், பேஸ்புக் மூலம் பலரிடம் பழகி ஏமாற்றியுள்ளாரா என்று போலீசார் விசாரணைனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications