Just In
- 26 min ago மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- 39 min ago டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 46 min ago ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- 1 hr ago வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
Don't Miss
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உலகை புரட்டி போட்ட தமிழனின் பண்டையை கடல் தொழில்நுட்பம்.!
அவர்களின் வாழ்வியல் முறைகளும், தொழில்நுட்பங்களும் இன்றும் உலகையே பிரமிக்க வைக்கின்றது. இதில் தமிழன் கடல் மற்றும் கப்பல் தொழில்நுட்பங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். நமக்கு எப்போதும் தமிழன் என்ற தி
கல் மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய குடி தமிழ் குடி என்பார்கள். தமிழர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கின்றது.
அவர்களின் வாழ்வியல் முறைகளும், தொழில்நுட்பங்களும் இன்றும் உலகையே பிரமிக்க வைக்கின்றது. இதில் தமிழன் கடல் மற்றும் கப்பல் தொழில்நுட்பங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
நமக்கு எப்போதும் தமிழன் என்ற திமிர் இருக்கும். இங்கிலீஸ் பேசினாலும் தமிழன்டா. பண்டைய காலத்தில் தமிழர்களின் கப்பல் கட்டுதல் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
11 வகை கடல் கலன்கள்:
11 வகையான கடற்கலன்களை கொண்டிருந்தான் தமிழன். மிதவை, தெப்பம், புனை, கட்டுமரம், ஓடம், வங்கம் என அது 11 வகையாக இருந்திருக்கின்றது என்கிறது சங்க இலங்கியங்கள்.
தமிழனின் வங்கம் எனும் கலன் ஓடியதாலே அது வங்ககடல் என பெயரே பெற்றது. அப்படி ஒரு வரலாறு தமிழனுக்கு இருந்தது.
சுமை தூக்கும் கப்பல்:
சுமார் 2500 டன் வரை அசால்டாக சுமந்து செல்லும் பாய்மர கப்பல்கள் அவனுக்கு இருந்தன. பருத்தி துணியினை புளியங்கொட்டை மாவில் ஊறவைத்து மிக கடினமான துணியாக்கி அதனை பாய்மரகப்பலின் பாயாக்கி அசத்தினான் தமிழன்
கடல் நீரோட்டமும், கடல் காற்று திசையினையும் அவன் விரல்நுனியில் வைத்து கீழகடல் மட்டுமல்ல, அரபிகடலையும் ஆண்டுகொண்டிருந்தான்.
காற்றையும் கிழித்து பயணிக்கும் நுட்பம்:
எதிர்காற்றிலும் பயணிக்கும் நுட்பம் அவனிடம் இருந்திருக்கின்றது. கடல் நீரோட்டத்தில் கலனை செலுத்தி மிக விரைவாக கரைகடக்கும் உத்தி அவனுக்கு தெரிந்திருக்கின்றது.
தமிழரின் கடற்பயண நுட்பத்தை உள்வாங்கியே கிரேக்கர், ரோமர் எல்லாம் கப்பல் கட்ட ஆரம்பித்து வெற்றி ரோமானியருக்கே கிடைத்தது, பின் அது ஐரோப்பா எங்கும் பரவியது. அப்படி பெற்று இந்தியா வந்தவன் வாஸ்கோடகாமா, பின் வெள்ளையர்கள்.
இந்த கடற்கலன் கட்டும் நுட்பம் தமிழரிடம் கிபி 1600 வரை இருந்திருக்கின்றது, அப்பொழுதும் தமிழனின் வங்ககடல் பயணமும் வியாபாரமும் செழிப்பாகத்தான் இருந்திருகின்றன.
நீரியியல் தொழில்நுட்பம்:
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி கடலில் போட்டால், அது எங்கு போய் சேரும் என்று தமிழன் தெரிந்து வைத்திருந்தான். அதுவும் நேராக தனுஷ்கோடிக்கே சென்றுவிடும் என்று தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளான்.
கடல் ஆமையில் தொழில்நுட்பம்:
தன் நுண்ணறிவால் நீரோட்டை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் அளப்பரியவை. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீரோட்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. நீரின் ஓட்டத்த கண்பிடித்த தமிழன் கப்பல் போக்குவரத்தை செலுத்த துவங்கினான்.
20000 தீவுகள் கண்டுபிடிப்பு:
20,000க்கும் அதிகமான தீவுகளை கண்டறந்துள்ளான் தமிழன். இதுவரை எந்த நாட்டில் கடல்படையும் போக முடியாத பல இடங்களையும் துறைமுகங்களையும் கண்டறிந்தான்.
தமிழச்சி குவேனியின் சாபத்தால் தடுமாறும் இலங்கை அரசியல்.!
மேலும், கடலில் பாறைகளிகளில் கப்பல் மோதினால், அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில்நுட்பம் தமிழன் மட்டும் பயன்படுத்தினான்.
உலகை ஆண்ட தமிழர்கள்:
பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளிலுன் பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்து இருக்கின்றனர்.
செல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.!
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெரியல் இருக்கின்றன. பாண்டியன் குறித்து சீனா அகராதியில் தேடினால், அதற்கு பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகளுக்கும் தமிழன் முன்னோடி.
போதி தர்மன் நமக்கும் நினைவுக்கு வருகின்றாரா. அதுதான் உண்மை, கொலம்பஸ் கண்டறிந்தது தமிழன் தொழில்நுட்பம்.
ஆமையும் தமிழனும்:
கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்று தான். ஆமைகளின் உருவம் கோயில் அமைக்க இது மட்டுமா காரணம். இல்லை.
தமிழ் பேசி அதிரவிட்ட 5300 ஆண்டு பழமையான மம்மி.!
நாம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்கா தாய் வீடு செல்வார்கள். அதே போல ஆமைக்கும் இந்த பழக்கம் உண்டு. பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470