58 நாடுகள் சேர்ந்து தேடியது யாரை: மோடியா, லேடியா இல்ல டாடியா!
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நிலை காரணமாக கடந்த ஜூலை 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு கிச்சையளிக்கப்படுகிறது.
மோடியா இல்ல லேடியா இல்ல டாடியானு என வனசம் பேச இது தேர்தல் களம் இல்லை. முதல்ல மோடினு சொல்லி பல நாடுகளை தேடியிருக்கலாம். அதுக்கப்புறமும் லேடிய உடம்பு சரியில்லாம இருக்கும் போது தேடி இருக்காலம்.

ஆனா இப்ப 58 நாடுகள் சேர்ந்து இணையத்தில் டாடிய தேடி இருக்கறது தான் இன்னைக்கு டாப் இடம் பிடிச்சிருக்கு.

திமுக தலைவர் கருணாநிதி:
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நிலை காரணமாக கடந்த ஜூலை 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு கிச்சையளிக்கப்படுகிறது.

கூகுள் தேடலில் கருணாநிதி:
கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் கூகுள் தேடலில் இந்திய அளவிலான சமீபத்திய ட்ரெண்ட்டில் கருணாநிதி என்ற பெயர் 5 லட்சம் முறைக்கு மேல் தேடப்பட்டுள்ளது. கலைஞர் என்ற வார்த்தையை 2 லட்சம் முறைக்கு மேல் தேடப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலிடம்:
கருணாநிதி என்ற பெயரையும் கலைஞர் என்றய பெயரையும் கூகுளில் புதுச்சேரியில் இருந்து தான் அதிகம் தேடப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை குறித்து நாளும், நிமிடம் வெவ்வொரு செய்திகள் வெளியாகின்றன. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் அதிகம் தேடி வருகின்றனர்.

தென் மாநிலங்கள்:
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கான ஆகிய தென்மாநிலங்களும் கருணாநிதியை குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் கலைஞர், கருணாநிதி என்ற பெயர்களும் அதிக முறை தேடப்பட்டுள்ளன.

7 நாளில் 24 மாநிலங்கள்:
கூகுள் தேடல் மூலம் கலைஞர், கருணாநிதி என்று உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இப்போது வரை 7 நாளில் 24 மாநிலங்கள் அதிகம் கருணாநிதி குறித்த தகவல்களை தேடியுள்ளனர். மேலும் தஞ்சாவூரில் உள்ள திருமலைசமுந்திரம் என்ற ஊரிலும் அதிகம் பேர் கருணாநிதி பெயரை தேடியுள்ளனர்.

58 நாடுகள் சேர்ந்து தேடிய கருணாநிதி:
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட 58 நாடுகள் சேர்ந்து கருணாநிதி, கலைஞர் என்ற பெயரை கூகுளில் தேடியுள்ளன. இப்போது மோடியையும், லேடியையும் தாண்டி டாடி (கருணாநிதி) தான் கூகுளில் டாப் ட்ரெண்டிங் ஆகியுள்ளார்.

குள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் டைட்டான் செக்யூரிட்டி கீ.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளது, அதன்படி வாடிக்கையாளர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை நிறுத்துவதற்கு புதிய யுஎஸ்பி சாதனத்தை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.
டைட்டான் செக்யூரிட்டி கீ என்று அழைக்கப்படும் இந்த யுஎஸ்பி ப்ளூடூத் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனங்களைப் பற்றிய மற்ற சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆன்லைன் ஸ்டோர்
ஆன்லைன் ஸ்டோர் இந்த யுஎஸ்பி சாதனம் அடுத்த சில மாதங்களில் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனம் உங்கள் கூகுள் சார்ந்த அனைத்து கணக்குகளையும் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது

டைட்டான் செக்யூரிட்டி கீ
டைட்டான் செக்யூரிட்டி கீ இந்த டைட்டான் செக்யூரிட்டி கீ எப்படி பயன்படும் என்றால் உங்கள் ஜிமெயில் போன்ற கணக்குகளில் சைன்-இன்-செக்யூரிட்டி என்ற விருப்பம் இருக்கும், இதை தேர்வுசெய்து பின்பு start setup என்ற விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும்.அடுத்தப் பகுதியில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும், பின்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும். பின்பு பாதுகாப்பு சார்ந்த அனைத்து வழிமுறைகளையும் கொடுத்துவிட்டு உங்கள் கை விரல் ரேகையை கொண்டு register செய்ய வேண்டும்.

யூட்யூப்
யூட்யூப் அடுத்து கூகுளில் யூட்யூப் மற்றும் கூகுள் பிளஸ் போன்ற பல்வேறு கணக்குகளை மிக எளிமையாகவும் பின்பு பாதுகாப்புடனும் இந்த சாதனத்தை கொண்டு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மொபைல்போன்:
உங்களது மொபைல் சாதனங்களிலும் இந்த டைட்டான் செக்யூரிட்டி கீ மிக எளிமையாக பயன்படுத்த முடியும், அதற்குதகுந்தபடி ப்ளூடூத் விருப்பத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் 20 டாலர்களுக்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications