Just In
- 4 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 5 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 6 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 6 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இனி இந்திய விமானப்படையின் அடி இடிபோல விழும்; கைகொடுத்த இஸ்ரோ!
ஏனெனில் இதன் அறிமுகமானது, முழுக்க முழுக்க இந்திய விமானப்படைக்கு சாதகமாகவும், முக்கியமானதாகவும் திகழ்கிறது. அதெப்படி என்பதை சுரேந்திர சிங் விளக்குகிறார்:
சமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆன இஸ்ரோ விண்ணில் செலுத்திய ஜிசாட்-7ஏ (GSAT-7A) எனும் தகவல் பரிமாற்ற செயற்கைக்கோள் ஆனதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இதன் அறிமுகமானது, முழுக்க முழுக்க இந்திய விமானப்படைக்கு சாதகமாகவும், முக்கியமானதாகவும் திகழ்கிறது. அதெப்படி என்பதை சுரேந்திர சிங் விளக்குகிறார்:
ஐஏஎப்-க்கு அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றைத் தொடங்க வேண்டிய காரணம் என்ன?
ஜிஎஸ்எல்வி வி-எப்11 (ஜிஎஸ்எல்வி மார்க் 2) ராக்கெட் மூலமாக ஏவுகணை ஆனது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுகணைப் பகுதியிலிருந்து ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது. இதுவொரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும், இது இந்திய விமானப்படையின் (IAF) பல்வேறு தரை நிலை ரேடார் நிலையங்களை ஒன்றிணைக்க உதவுகிறது. இதன் விளைவாக விமானப்படைகளின் நெட்வொர்க் மையப்படுத்தப்பட்டு, விமானங்களின் போர் திறன் அதிகரிக்கும், இவ்வழியாக இந்திய விமானப்படையின் உலகளாவிய நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.
இந்திய விமான படைக்கு ஜிசாட் 7ஏ, ஏன் முக்கியம்?
ஜிசாட்-7ஏ ஆனது அனைத்து விமான நிலையங்களையும் மட்டுமின்றி, ட்ரோன் செயல்திட்டங்களையும் அதிகரிக்க செய்யும். அதாவது நிலத்தடி கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து இராணுவ மேம்பாட்டிற்கான இராணுவ ஆளில்லாத விமானங்களை (UAV) இயக்கவும் உதவும். இது ஆளில்லா விமானிங்களின் வரம்பு, பொறுமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். உடன் நீண்ட நேரத்திற்கு பின்னும் கூட எதிரி இலக்குகளைத் தாக்கக்கூடிய, மிகவும் பொறைமையான கட்டுப்பாடுகளை வழங்குமாம். இன்னும் சொல்லப்போனால் இந்திய விமான படையின் இந்த திறன் ஆனது, அமெரிக்காவின் ஆயுதந்தாங்கிய பிரிமியர்-பி அல்லது கடல் கார்டியன் டிரான்ஸ்களுக்கு போட்டியாகவும் திகழலாம்
ஜிசாட்-7ஏ சாட்டிலைட்டின் அம்சங்கள் என்ன?
சுமார் 500-800 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்த தகவல் பரிமாற்றம் செயற்கைக்கோள் ஆனது 1-2கே பஸ் மீதான சுற்றுப்பாதை ஆற்றல் மற்றும் சுற்றுப்பாதை பராமரிப்பு ஆகிய இரண்டிற்கான இரு- ப்ரோபலன்ட் இரசாயன உந்துவிசை அமைப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் நான்கு சோலார் பேனல்கள் ஆனது 3.3 கிலோவாட் மின்சாரத்தை உருவாக்குகின்றன.
இஸ்ரோவிடம் இந்திய ராணுவத்திற்கான அர்ப்பணிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் எத்தனை உள்ளன?
ஜிசாட் 7ஏ ஏவுதலுக்கு முன்னர், கடந்த செப்டம்பர் 29, 2013 அன்று கடற்படைக்கு என்று பிரத்தியேகமாக உருவாக்கம் பெற்ற ஜிசாட் 7 (ருக்மணி என்று அழைக்கப்படும்)வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அது இந்திய ஆராய்ச்சி, நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடல்வழி விமானங்கள் ஆகியவற்றுக்கான நிஜ நேர உள்ளீடுகளை வழங்கி வருகிறது.இந்திய கடற்படை (ஐஏஎஃப்) ஆனது அடுத்த சில ஆண்டுகளுக்குள் மற்றொரு செயற்கைக்கோளை (ஜிசாட் 7சி) பெறும் வாய்ப்பும் உள்ளது, அது கப்பல்களின் பிணைய மையப்படுத்தல்களை செயல்படுத்தும் நோக்கத்தின் கீழ் உருவாகலாம்.
நமது இந்திய இராணுவத்தின் விண்வெளி சொத்துகள் என்னென்ன?
இந்தியா தற்போது 13 இராணுவ செயற்கைக்கோள்களை கொண்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் சிறந்த ஸ்கேனிங் செய்வதற்கு உதவுகின்ற பூமிக்குரிய சுற்றுப்பாதையில் கார்ட்டோசாட்-தொடர் மற்றும் ரிசாட் செயற்கைக்கோள்கள் போன்ற தொலைதூர-உணர்திறன் செயற்கைக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த சில செயற்கைக்கோள்கள் புவி சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் படைகளுக்கான கண்காணிப்பு, ஊடுருவல் மற்றும் தகவல்தொடர்பு நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றன. தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள்கள் ஆனது பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத லான்ச்பேட்களை அழிக்க இராணுவத்திற்கு உதவியது இங்கு குறிப்பிடததக்கது.
உலகில் எத்தனை இராணுவ செயற்கைக்கோள்கள் உள்ளன?
தற்பொழுது, பூமியின் சுற்றுப்பாதையில் 320 இராணுவ செயற்கைக்கோள்கள் உள்ளன, அவற்றில் பாதி செயற்கைகோள்கள் ஆனது அமெரிக்கா (முதல் இடம்) ரஷ்யா (இரண்டாம் இடம்) மற்றும் சீனாவின் பெயரில் மிதக்கின்றன. இந்த பட்டியலில் சீனாவிற்கும், இந்தியாவிற்கும் தான் மிகப்பெரிய போட்டி நடக்கிறது. இந்த இடத்தில், கடந்த ஜனவரி 2017 ல் "குறைந்த-புவி செயற்கைக்கோள்களுக்கு" எதிரான செயற்கைக்கோள்-எதிர்ப்பு ஆயுதங்களை சீனா பரிசோதித்தும், விண்வெளியில் தொடர்ந்து இராணுவச் சொத்துக்களை வளர்ப்பதிலும் பெரும் முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470