சந்திரயான்-2:14நாட்கள் முடிந்த பின்பு விக்ரம் லேண்டர் என்னவாகும்? பதில் இதுதான்.!
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

விக்ரம் லேண்டர்
பின்பு விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து சரியாக 2.1கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுபட்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்பிட்டரை பயன்படுத்தி கண்டுபிடித்தது
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் எங்குத் தரையிறங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ஆர்பிட்டரை பயன்படுத்தி கண்டுபிடித்தது. இந்த செய்தியைக் கேட்டு சோகத்திலிருந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர்.

ஹார்டாக லேண்ட் ஆனதுதான் இந்தப் பிரச்னை
"நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ஹார்டாக லேண்ட் ஆனதுதான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். அப்படி லேண்ட் ஆன காரணத்தினால் லேண்டர் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று இன்னொரு இஸ்ரோ விஞ்ஞானி கூறுகிறார்

சூரிய ஒளி
மேலும் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எவ்வளவு வேகமாக இணைப்பை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. குறிப்பாக 14நாட்கள் மட்டுமே நிலவில் பகல் பொழுதாக இருக்கும், அதுவும் செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான்-2 நிலவில் இறங்கியருக்கிறது. 21-ம் தேதி வரை அங்கு சூரிய ஒளி இருக்கும்.

சோலார் பேட்டரிகள் செயலிழந்துவிடும்
குளிர் ஆரம்பத்தபிறகு வெப்பநிலை மைனஸ் 150டிகிரி செல்சியஸுக்குச் சென்றுவிடும் எனறும் பின்பு அப்பொழுதுவிக்ரம் லேண்டரின் சோலார் பேட்டரிகள் செயலிழந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

நம்பிக்கை
சில நாட்கள், சில வாரங்கள் சமிக்ஞையே இல்லாத பல செயற்கைக்கோள்களில் திரும்பத் திரும்ப முயற்சித்துஉயிர்ப்பித்திருக்கிறோம். நிலவு அல்லாத இடங்களில் இது பலமுறை நடந்திருக்கிறது. அந்த நம்பிக்கைஇஸ்ரோவுக்கு இருக்கின்றது எனவே இந்த முயற்சியில் கண்டிப்பாக இஸ்ரோ வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications