இந்தியாவிடம் ஏகே203 துப்பாக்கி-கதறும் பாகிஸ்தான்:மோடி விந்தை மரண மாஸ்!
தற்போது, நட்பு நடான ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஏகே 203 துப்பாக்கிகளையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்த ஆலை திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து துப்பாக்கி, ஏவுகணை, டாங்கிகள் உள்ளிட்டவைகளை அணு ஆயுதங்களையும் இந்தியா வாங்கி வந்தது.
மோடி பிரதமான பிறகு, மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். இதன் பயனாக தற்போது, டாங்கிகள் மற்றும் துப்பாக்கி உற்பத்தி செய்யும் ஆலைகள் இந்தியாவில் உருவாக்கியுள்ளது.

தற்போது, நட்பு நடான ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஏகே 203 துப்பாக்கிகளையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.
குறுகிய காலத்தில் இந்த ஆலை திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டால் தற்போது, பாகிஸ்தான் கடும் பயத்தில் இருக்கின்றது. சீனாவும் ஒருபடி மேல் போய் இந்தியாவின் இந்த அரசு வளர்ச்சியை பார்த்து வாயை அடைத்து போயியுள்ளது.
இது மோடியின் வித்தையல்ல, இது அவரது விந்தை என்றே கூறலாம்.

துப்பாக்கி ஆலை துவக்கம்:
பிரதமரான பின் முதன் முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு, 538 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார். உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி தயாரிக்கும் தளவாடத் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஏ.கே. 203 ரக துப்பாக்கி:
ரஷ்யாவுடன் கையெழுத்தான ஒப்பந்தப்படி அந்த தொழிற்சாலையில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேவையான ஏழரை லட்சம் ஏ.கே. 203 ரக தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாராகும் இது ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை விட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டது.

இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம்:
இந்த நிகழ்வில், உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏ.கே.203 ரக துப்பாக்கி தயாரிப்புக்காக இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பெருமை பிரதமர் மோடியையே சாரும் என்றார். அடுத்து வரும் 3 ஆண்டுகளில் ஏகே 203 ரைஃபில்களின் அனைத்து உதிரிபாகங்களும் உள்நாட்டிலேயே தயாராகும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு செய்தி:
கலாஷ்னிகோவ் ஆலை திறப்பை ஒட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சிறப்பு செய்தியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமேதி அந்த மேடையில் வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, அமேதி தொகுதியில் வாக்குகளைக் கொண்டு மக்களிடையே தாம் பாகுபாடு பார்க்கவில்லை என்றார். இனிமேல் அமேதி என்பது அங்கு வந்த தலைவர்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படாமல் வளர்ச்சித்திட்டங்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படும் என மோடி குறிப்பிட்டார்.

தீவிரவாதிகளை அழிக்கும் ஏகே 203:
நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளையும் எதிர்த்து போராடும் நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஏகே 203 ரக துப்பாக்கி மிகப்பெரும் உறுதுணையாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.
அமேதி தளவாடத் தொழிற்சாலையில் என்ன ஆயுதம் தயாரிப்பது என்றே தெரியாமல் முந்தைய அரசு இருந்ததாகவும், நமது வீரர்கள் புல்லட் புரூப் கவசமின்றி எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் மோடி சாடினார்.

புதினுக்கு நன்றி கூறிய மோடி:
இவ்வளவு குறுகிய காலத்தில் ஏகே 203 ரக துப்பாக்கி தயாரிப்பை சாத்தியமாக்கியதற்காக தமது நண்பரான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நன்றி சொல்ல விரும்புவதாக மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டிய மோடி:
நவீன ஆயுதங்களுக்காகவும், போர் விமானங்களுக்காகவும் நமது வீரர்களை முந்தைய அரசு காக்க வைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய மோடி, சைக்கிள் தயாரிப்பு ஆலைக்கு நிலம் கையகப்படுத்தி அதை தங்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொண்டதாக விமர்சித்தார்.


Click it and Unblock the Notifications