விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..
பூமியில் நம்முடன் பல விசித்திரமான மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் என்று பலவிதமான கண்ணுக்குத் தெரியும் உயிர்கள் வாழ்ந்து வருகிறது. அதேபோல், நமது கண்களுக்குத் தெரியாமல் நம்மிடையே பல விதமான நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை மற்றும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், வைரஸ்களும் இப்போது பூமியில் பெருகி வருகிறது. பூமியில் மற்றும் இவற்றின் பெருக்கம் அதிகரிக்கவில்லை விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலும் இவை பெருகி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த ஈர்ப்பு சூழலிலும் கூட இவை எப்படி வளர்ந்தது?
குறைந்த ஈர்ப்பு சூழலிலும் கூட இவை எப்படி வளர்ந்து வருகிறது என்பது தான் விஞ்ஞானிகளுக்கே இன்னும் குழப்பமாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஐ.எஸ்.எஸ்ஸில் வெவ்வேறு இடங்களில் வாழும் நான்கு பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடையச் செய்தது மூன்று பாக்டீரியா இனங்கள் தான், காரணம் இப்போது வரை இந்த பாக்டீரியாக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தது என்று தெரியவில்லை, இவை அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளது.

எங்கிருந்து இந்த நான்கு பாக்டீரியாக்கள் கண்டெடுக்கப்பட்டது தெரியுமா?
நான்கு பாக்டீரியாக்களில் மூன்று பாக்டீரியாக்கள் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டன. இதில் ஒன்று ஐ.எஸ்.எஸ் ஆராய்ச்சி நிலையங்களின் மேல்நிலை குழுவில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது பாக்டீரியா குபோலாவில் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவது பாக்டீரியா ஐஎஸ்எஸ் இன் டைனிங் டேபிளின் மேற்பரப்பில் காணப்பட்டது. நான்காவது பாக்டீரியா 2011 ஆம் ஆண்டில் பூமிக்குத் திரும்பிய பழைய ஹெப்பா பில்டரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

மண் மற்றும் நன்னீரில் காணப்படும் பாக்டீரியாவுக்கு ஸ்பேசில் என்ன வேலை?
நான்கு பாக்டீரியாக்களும் மண் மற்றும் நன்னீரில் காணப்படும் பாக்டீரியாக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது மட்டும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நைட்ரஜன் நிர்ணயம், தாவர வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பாக்டீரியாக்கள் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. மேலும், இவை முக்கியமாகத் தாவர நோய்க்கிருமிகளை நிறுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் தான் என்று ஒரு ஆராய்ச்சி குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நல்ல பாக்டீரியாவா? இல்ல கெட்ட பாக்டீரியாவா?
அடிப்படையில், நீங்கள் ஏதேனும் ஒரு பொருட்களை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அங்கு நல்ல பாக்டீரியாக்கள் நிச்சயம் இருக்கும்.
அத்தகைய மண் பாக்டீரியாக்கள் ஐ.எஸ்.எஸ்ஸில் என்ன செய்கின்றன என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் விண்வெளி நிலையத்தில் வாழும் விண்வெளி வீரர்கள் பல ஆண்டுகளாகச் சிறிய அளவிலான உணவை வளர்த்து வருகின்றனர்.

விண்வெளியில் சிறிய அளவில் விவசாயம்
இன்னும் சரியாகச் சொல்லப் போனால், விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிறிய அளவில் விவசாயம் செய்து, தாவரங்களை வளர்த்து வருகின்றனர். எனவே தாவர சம்பந்தப்பட்ட நுண்ணுயிரிகளை ஸ்பேஸ் ஷிப்பில் நாம் கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமல்ல. ஆனால், அவற்றை அடையாளம் காண முடியாமல் புதுமையானதாக இருப்பதே இப்போது இங்கு ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அடையாளம் காணப்படாத இனங்களைச் சேர்ந்த உயிர்களா?
கண்டுபிடிக்கப்பட்ட விகாரங்களில் ஒன்று ஹெப்பா பில்டரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மெத்திலோரூப்ரம் ரோடீசியம் எனப்படும் அறியப்பட்ட இனமாக அடையாளம் காணப்பட்டது. அதேபோல், கண்டுபிடிக்கப்பட்ட மற்ற மூன்று விகாரங்கள் முன்னர் அடையாளம் காணப்படாத இனங்களைச் சேர்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று அடையாளம் தெரியாத விகாரங்களுக்கு IF7SW-B2T, IIF1SW-B5 மற்றும் IIF4SW-B5 என்று பெயரிடப்பட்டுள்ளது.

எம். இண்டிகம் இனத்துடன் தொடர்பா? உண்மையா?
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக மரபியலாளர் சுவாதி பிஜ்லானி தலைமையிலான குழு, புகழ்பெற்ற இந்தியப் பல்லுயிர் விஞ்ஞானி அஜ்மல் கானுக்குப் பிறகு புதிய இனங்களை மெத்திலோபாக்டீரியம் அஜ்மலி என்று அழைக்க முன்மொழிந்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு ஏற்கனவே எம். இண்டிகம் என்று அழைக்கப்படும் இனத்துடன் தொடர்புடையது என்று இந்த குழு கூறியுள்ளது. இந்த நுண்ணுயிரிகள் ஐ.எஸ்.எஸ்ஸின் கடுமையான நிலைமைகளைத் தக்கவைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி
நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் விஷயங்களைக் கருத்தில் கொண்டு, ஆராய்ச்சி குழு இந்த நான்கு வளர்ச்சிகளை மரபணு பகுப்பாய்வு மூலம் வைத்து தாவர வளர்ச்சியை மேம்படுத்த உதவும் மரபணுக்களைத் தேடுகிறது. இந்த மூன்று ஐ.எஸ்.எஸ் விகாரங்களின் முழு மரபணு வரிசை கூட்டமும் எதிர்கால ஆய்வுகளில் ஐ.எஸ்.எஸ் தனிமைப்படுத்தல்களின் பூமியின் சகாக்களுடன் ஒப்பீட்டு மரபணு தன்மையை செயல்படுத்த உதவும் என்று குழு தெரிவித்துள்ளது.

நீண்ட விண்வெளி பயணத்தை இந்த உயிர்கள் மாற்றி அமைக்குமா?
இது மைக்ரோ கிராவிட்டி நிலைமைகளின் கீழ் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இவை எதிர்காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணங்களுக்கு சுய-நிலையான தாவர பயிர்களை வளர்ப்பதற்கும் பங்களிக்கும் சாத்தியமான மரபணு விகாரங்களை அடையாளம் காண உதவும் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஸ் விகாரங்களில் ஒன்று IF7SW-B2T தாவர வளர்ச்சியில் ஈடுபடும் நம்பிக்கைக்குரிய மரபணுக்களைக் கொண்டிருந்தது.

பூமிக்கு கொண்டுவரப்படும் 1,000 சாம்பிள்கள்
சைட்டோகினின் என்ற வேர்கள் மற்றும் தளிர்களில் உயிரணுப் பிரிவை ஊக்குவிக்கும் மிக முக்கியமான ஒரு மரபணுவை இவை கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஸ்ஸில் ஏற்கனவே இது போன்று 1,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவை இன்னும் பூமிக்குக் கொண்டுவரப்படவில்லை. சேகரிக்கப்பட்டுள்ள 1,000 சாம்பிள்கள் விரைவில் பூமிக்கு கொண்டுவரப்பட்டு அடுத்தகட்ட ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் துவங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








