அணுஆயுதங்களை ஒழித்து வைத்து கொண்டு கிம் நாடகம்: ஐ.நா உறுதி.!
குறிப்பாக இரண்டு சோதனைகள் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான் தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
நேற்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 315 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை 15பேர் கொண்ட குழு வெளியிட்டுள்ளது. அதில் வடகொரிய அணுஆயுதங்களை பாதுகாக்கிறது எனவும்,அவற்றை எந்த ராணுவத்தின்
மூலம் அழிக்க முடியாத திறனுடன் அந்நாடு வைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரியா அதிபர் கிம்முடனான உறவில் முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை.!
மேலும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 315 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு வடகொரியா தரப்பில் இன்னும் பதில் தரப்படவில்லை, முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை
மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதணைகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்கு அருகில்.!
குறிப்பாக இரண்டு சோதனைகள் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா,ஜப்பான் தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

பொருளாதாரத் தடைகள்
ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது
புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

வடகொரியா
இருந்தபோதிலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகiணை சோதனைகளை நடத்தி வருகிறது.

ஒலிம்பிக்
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது, அது முதல் வடகொரிய-தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது என்று தான் கூறவேண்டும். இதனை தொடர்ந்து
தான் ட்ரம்ப்-கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்ப்பட்டது, இந்த சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, வடகொரியா தொடர்ந்து அதிநவீன அணுஆயுதங்களை பாதுகாக்கிறது.

அமெரிக்க அதிபர்
மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும்-வடகொரிய அதிபர் கிம்மும் மீண்டும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








