இமயமலைக்கு அழிவு-8 நாட்டு மக்களுக்கு பேராபத்து-வெடித்த பிரளயம்.!
தற்போது ஏற்பட்டுள்ள பருவ நிலைமாற்றத்தால், இமயமலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பனிமலைகள் எல்லாம் உருகி பிரளம் ஏற்பட்டு 8 நாட்டு மக்களும் அழிவை நோக்கி உள்ளனர். இந்து குஷ் மற்றும் இமயமலைகளுக்கு பருவ நில
தற்போது ஏற்பட்டுள்ள பருவ நிலைமாற்றத்தால், இமயமலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பனிமலைகள் எல்லாம் உருகி பிரளம் ஏற்பட்டு 8 நாட்டு மக்களும் அழிவை நோக்கி உள்ளனர்.

இந்து குஷ் மற்றும் இமயமலைகளுக்கு பருவ நிலை மாற்றத்தால் பேராபத்து ஏற்பட்டு மக்கள் அழிவிடுவார்கள் என்று ஓர் ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காணாமல் போகும் மலைகள்:
கார்பன் டை ஆக்ஸைடு பூமியில் அதிகப்படியாக வெளியேறுவதால் உலக வெப்பமயமாக்க ஏற்பட்டு விரைவில் பூமி பெரும் மலைகளில் மூன்றில் இரண்டு பங்கு காணாமல் போய்விடும்.

அழிவு நிச்சயம்:
உலகம் முழுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்ஸியல் அளவுக்குக் கட்டுக்குள் வைத்தாலும், ஒரு பங்கு மலை பகுதிகள் இருக்காது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

8 நாட்டு மக்களுக்கு முக்கிய ஆதாரம்:
இந்த பனிமலைகள் தான் 8 நாடுகளில் வசிக்கும் 250 மில்லியன் மக்களுக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமாக விளங்கி வருகின்றது.
துவருப்பகுதிகளில் தவிர உலகத்தில் அதிகப்படியன பனிக்கட்டிகள் கிடைப்பது இமயமலை மற்றுமூ இருந்து குஷ் பகுதிகளில் உள்ள கே2 மற்றும் எவெரஸ் மலை சிகரப்பகுதிகளில் தான்.

வெறும் பாறையாக மாறும்:
நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் வரும் காலங்களில் பனி மலைகள் உருகி மாறக் கூடும் என்றுகின்றது ஆய்வுகள்.

காற்று மாசு அதிகரிப்பு:
கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து கங்கை பிராந்தியம் உட்பட கிழக்கில் பிரம்மபுத்திர பள்ளதாக்கு வரையில் பெரும் பகுதிகளில் வரையிலான காற்று மாற்று அதிகரித்து வருகின்றது. இது உலகில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள பிராந்தியங்களில் ஒன்று.

பனிக்கட்டிகள் துரிதமாக உருகின்றது:
இந்த மோசமான காற்று காரணமாக பனிமலைகளில் நிலை மேலும் சோசமடைந்து வருகின்றது. கருமை நிற கார்பன் மற்றும் தூசிகளின் பனியின் மேல் படர்வதால் பனிக்கட்டிகள் உருகுவது அதிவேகமாகின்றது.

36 சதவீதம் இமயமலை காணாமல் போகும்:
உலக வெப்பநிலையானது 2டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு அதிகரிக்கும் எனில் 2100-ல் பனிமலைகளின் பாதி இருக்காது. உலகம் உடனடியாக சுதாரித்து அதிசயிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வெப்பநிலை உயர்வை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் குறைந்தாலும் பனிமலைகள் 36 சதவீதம் அழிந்து விடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

கேள்விபடாத ஆழிவாக இருக்கும்:
உலக வெப்பநிலை மாற்றத்தால், இந்த அழிவு நீங்கள் கேள்விபடாத அழிவாக இருக்கும் என்று ஆய்வுவை வழிநடத்திய பிலிப்பஸ் வெஸ்டர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மையம் ஆய்வு:
ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

ஆழிவு துவங்கிவிட்டது:
ஏற்கனவே பருவ நிலை மாற்றத்தால், மலை பிராந்தியங்களாக உள்ள இந்த மண்டலங்களில் வாழும் மக்கள் ஏற்கனவே பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.
மோசமான காற்று மாசுபாடும் அதிகரிக்கும் அதீதி வானிலை நிகழ்வுகளாலும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

உணவு கூட கிடைக்காது நிலை:
வரும் காலங்களில் பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் குறைவது மற்றும் பருவமழையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நகர்பகுதிளில் உள்ள தண்ணீர் நிலைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
இதனால் உணவு உற்பத்தி பெரும் பாதிப்பு ஏற்படும் என்று பிலிப்பஸ் தெரிவித்துள்ளார்.

அழிவுவை சந்திக்கும் நாடுகள்:
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நோபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3500 கி.மீ பகுதி கேள்விக்குறியாகும் பிராந்தியாக உள்ளது.

நீர் ஆதாரம்:
இமயமலை மற்றும் இந்து குஷ்மலை பகுதிகளில் உள்ள பனிமலைகள் தான் உலகின் முக்கியமான 10 நதிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

முக்கியமான நிதிகள்:
கங்கை, சிந்து, மஞ்சள், தேகொங், ஐராவதி உள்ளிட்ட நதிகள் முக்கியமானவை. இந்த நதிகள் பாதிக்கப்படுவதால், 100 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் உணவு, தண்ணீர், தூய காற்று இல்லாமல் நேரடியாகவும் மறைமுகவாகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

1.65 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்:
பனிமலை உருகுவதால் 1.65 பில்லியன் மக்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படுவார்கள். மேலும் விளைநிலங்களும் அழிவுறும் என விஞ்ஞானிகள் அமச்சம் தெரிவித்துள்ளனர்.

கடும் வறட்சி ஏற்படும்:
ஏற்கனவே இந்த பகுதிகளில் பருவ நிலை மாற்றத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு வருகின்றது. இதனால் இப்பகுதிகளில் உணவு தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிப்பு ஏற்படும் என பிரிட்டீஷ் அண்டார்டிக் ஆய்வாளர் ஹமிஷ்பிச்சர்ட் தகவல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








