நாளை விண்ணில் பிஎஸ்எல்விசி-44 ராக்கெட்.! நன்மைகள் என்ன?
இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு செயற்கைகோள்களுடன் நாளை விண்ணுக்கு செலுத்தப்படுகின்றது. இதில் கலாம்சாட் என் செயற்கைக்கோளும் விண்ணிற்கு ஏவப்படு இருக்கின்றது.
இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு செயற்கைகோள்களுடன் நாளை விண்ணுக்கு செலுத்தப்படுகின்றது.

இதில் கலாம்சாட் என் செயற்கைக்கோளும் விண்ணிற்கு ஏவப்படு இருக்கின்றது.

இஸ்ரோ:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இது சர்வதேச நாடுகளுக்கும் குறைந்த செலவில் செயற்கைகோள்களை ஏவும் தளமாக இருக்கின்றது.
இதனால் இஸ்ரோ நிறுவனம் வர்த்தகதளமாக மாறியுள்ளது. பிற நாடுகளை சேர்ந்த செயற்கைகோள் ஏவப்பட்டு வருகின்றது.

குறைந்த செலவு:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் குறைந்த செலவில் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் இந்தியாவின் தனியார், அரசு நிறுவனங்களின் செயற்கைகோள்களையும் ஏவி வருகின்றது.

தளவாட பொருட்கள்:
இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஏவப்படுகின்றது. மேலும், உலகளவில் இஸ்ரோ வர்த்தக சந்தையாகவும் மாறியுள்ளது.

இந்தியாவுக்கான சேவை:
இந்தியாவுக்காக இஸ்ரோ நிறுவனம் சார்பில் பல்வேறு செயற்கைகோள் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு செயற்கைகோள் சேவை அத்தியாவசியமாக இருக்கின்றது. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் சார்பில் செயற்கைகோள் ஏவப்பட இருக்கின்றது.

பிஎஸ்எல்விசி-44:
இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் கலாம்சாட் என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

இமேஜிங் செயற்கைகோள்:
ஹாம் ரேடியோ சேவைக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இஸ்ரோ தயாரித்த மைக்ரோசாட்-ஆர் இமேஜிங் செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்காக அனுப்பப்பட உள்ளது.

கவுண்டட்டவுன் துவக்கம்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications