வானத்தில் இருந்து விழுந்து கிராம மக்களை பதறவைத்த மர்ம பெட்டி: அப்படி அதில் என்னதான் இருந்தது?
தற்போது சமூக வலைத் தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது ஹைதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வானத்தில் இருந்து மர்ம பெட்டி விழுந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இந்த வீடியோதான் பல சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வானத்தில் வினோத பொருள்?
குறிப்பாக நேற்று ஹைதராபாத் நகரில் வானத்தில் வினோத பொருள் ஒன்றை பார்த்தாக பலர் இணைய தளங்களில் பதவிட்டு வந்தனர். பின்பு ஹைதராபாத் நகரில் இருந்து சரியாக 100 கிமீ தொரைவில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் இருக்கும் மார்பல்லி மண்டலத்தின் மொகிலிகிடா கிராமத்தில் விவசாய பூமியில் மர்மப் பொருள் ஒன்று பாராசூட் துணையுடன் விழுந்ததாகத் தகவல்கள் வெளிவந்தன.

ராட்சத பெட்டி
இந்த மர்ம பொருள் பார்த்த அந்த கிரமாத்ததை சேர்ந்த மக்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். அதாவது பார்ப்பதற்கு ராட்சத பெட்டி போல இருந்த அந்த பொருளில் கேமராக்கள் இருந்ததைக் கிராம மக்கள் பார்த்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலியன்கள் வேலையா?
அதேபோல் இது ஏலியன்கள் வேலையாக இருக்குமோ என்றெல்லாம் இணையத்தில் பலரும் பேசத் துவங்கினர். குறிப்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அந்த பொருளை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடத் துவங்கிவிட்டனர். சில மணி நேரங்களில் அந்த வீடியோவைரலாகி விட்டது.

TIFR அமைப்பின் ஆராய்ச்சி
இதைத்தொடர்ந்து டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த மர்ம பொருள் விழுந்த இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் அது TIFR அமைப்பின் ஆராய்ச்சி என்பது தெரியவந்துள்ளது.

ஸ்பேஸ் கேப்ஸ்யூல்
அதாவது வளிமண்டல அடுக்கு குறித்த ஆய்வுக்காக ஹீலியம் பலூன்களில் இந்த ஸ்பேஸ் கேப்ஸ்யூல் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்பு இந்த ஆராய்ச்சியில் நிபுணர்கள் ஈடுபட்ட போதுதான் அது தடம் மாறி மொகிலிகிடா கிராமத்தில் விழுந்திருக்கிறது. அதேபோல் இந்த விண்வெளி கேப்ஸ்யூல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

1000 கிலோ எடை
சுமார் 1000 கிலோ எடையுள்ள இந்த கேப்ஸ்யூல் ஹீலியம் பலூன் மூலம் பறக்க விடப்பட்டிருக்கிறது. பின்பு இதனை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கண்காணித்து வந்துள்ளனர் ஆய்வாளர்கள். குறிப்பாக ஹீலியம் பலூன் தரையிறங்கியதும் அங்கு விரைந்து வந்த TIFR நிபுணர்கள் அந்த கேப்ஸ்யூலை பாகம் பாகமாகப் பிரித்து அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

பரபரப்பினை ஏற்படுத்தியது
மேலும் இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினருக்கும் அந்த அமைப்பினர் தகவல் கொடுத்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் விவசாய பூமியில் இதுபோன்ற கேப்ஸ்யூல் வந்திறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications