சீனாவின் எல்லா பொருட்களுமே போலி தான் போல; பூமியோட மோதப்போகும் சீன ஸ்பேஸ்ஷிப்.!
டியாங்கோங் விண்வெளி நிலையம் பூமியை நோக்கி 2700 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தொவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இதன் முழு கட்டுப்பாட்டை இழந்தந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சீன தேசிய தினமான அன்று டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. மேலும்ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குசாவல் விடும் வகையில் இந்த பெரிய ஆராய்ச்சி (டியாங்கோங்-1) நிலையம் ஒன்றை கட்ட முடிவு எடுத்தது.

இந்த டியாங்கோங்-1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டியாங்கோங்-1 ஆராய்ச்சி நியைத்தில் பணியாற்றுவதற்காக சீனா விண்வெளி வீரர்களை அனுப்பியது, அதில் சீனாவின் முதல் பெண் விண்வெளி வீரரான லியூ யாங் என்ற பெண்மணியும் இந்தக் குழுவில் சென்றார்.

சீனா விண்வெளி வீரர்கள்:
சீனா விண்வெளி வீரர்கள் அங்கு சென்று வேலை பார்த்த போது எதிர்பாராத வகையில் அவர்கள் செய்த தவறால் ஆராய்ச்சி நிலையம் மொத்தமாக தனது கட்டுப்பாட்டை இழந்தது. மொத்தமாக அந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செயல் இழந்தது.

சுமார் 8.5 டன்:
டியாங்கோங்-1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சுமார் 8.5 டன் எடை கொணடதாக உள்ளது. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016-ம் ஆண்டு தனது முழு கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், பின்பு 2017 இறுதியில் பூமியில் விழும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் பூமியின் மீது வந்து மோதும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் :
இன்னும் சில மாதங்களில் பூமியின் மீது மோதும்என்ற தெரிவித்த நிலையில் தற்போது அந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்த இந்த ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2700 கிமீ வேகம்:
டியாங்கோங் விண்வெளி நிலையம் பூமியை நோக்கி 2700 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தொவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இதன் முழு கட்டுப்பாட்டை இழந்தந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ஆராய்ச்சி நிலையம்:
டியாங்கோங் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாய்பில்லை எனக் கூறப்படுகிறது, மேலும் பூமியின் மேற்பரப்பை அடையும்போது
அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும் என்பதால் மக்கள் இதைக்கண்டு பயப்பட தேவை இல்லை என சீன ஆராய்ச்சிநிலையம் தகவல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications