பல லட்சம் கிமீ தாண்டி பார்த்தோம், பக்கத்துல பார்த்தோமா.?!
அண்டம் மிக மிக பெரியது என்ற அறிவை பெற்ற நாள் முதல், மனித இனமானது பூமி போன்றே வேறேதும் கிரகம் அண்டத்தில் உள்ளதா என்ற தேடலை தொடங்கி விட்டது. அந்த தேடல் மீது கொண்ட அளப்பரியாத ஆர்வமும் ஒருவகையிலான மனித பேராசையும் தான் விண்வெளிக்குள் பல ஒளியாண்டுகள் தூரம் வரையிலாக பயணித்துக் கொண்டிருக்க வைக்கிறது என்றே கூறலாம்..!
அப்படியாக, பூமி போன்ற கிரகத்தை பல லட்சம் கிலோமீட்டர்கள் தாண்டி தேடி பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனத்திற்கு, அருகாமையில் கிடைத்திருக்கிறது ஒரு மென்மையான விடை..!

#1
உலகம் போன்றே நிலைகள் கொண்ட, மிகவும் மென்மையாக அறிகுறிகள் கொண்ட ஒரு கிரகம் பூமியின் மிக அருமையுள் அதாவது நான்கு ஒளியாண்டுகள் தொலைவில் கண்டறியப்பட்டுள்ளது.

#2
மேலும் இந்த கிரகம் ஆனது பூமியை விட ஒரு நல்ல கிரகமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.

#3
30 ஆண்டுகளுக்கு முன்பு நமது கிரகத்தோடு நெருங்கிய ஒரு அண்டை ஒளியானது தன்னுள் ஒரு இரகசியத்தை வைத்திருக்கிறது என்று நம்பப்பட்டது அதாவது அது ஒரு நட்சத்திரம் அல்ல, இரண்டு நடச்சதிரம் என்று நம்பப்பட்டது.

#4
தற்போது அந்த இரண்டு நட்சத்திரங்களில் ஒன்றை ஒரு கிரகம் சுற்றி கொண்டு வருவதாகவும், அது ஒரு பழைய விண்வெளி பாறை இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

#5
பூமியில் இருந்து வெறும் 4.4 ஒளியாண்டுகள் தூரத்திலிருக்கும் இந்த கிரகத்தை சாத்தியமான விண்கலம் மூலம் பத்தாண்டுகளில் அடைந்து விட முடியும்.

#6
வேறு எங்கும் நமது உயிர்மூலக்கூறுகளில் ஒரு சுயபிரதியெடுப்பு நிகழ்த்த முடியாது என்பதை நம்பும் சில விஞ்ஞானிகள் இந்த கிரகத்தையே அடுத்த பூமியாக முதன்மை படுத்துகின்றன.

#7
ஏன் பூமியை விட்டு நாம் வெளியேற வேண்டும்..? - எலான் மஸ்க் அதிரடி..!
நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..?!
மர்மமான சைபீரிய இராட்சத ஓட்டைகள், உருவானது எப்படி..?

#8
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications