போர் களத்தில் பாகிஸ்தான் சீனாவை இறங்கிய அடிக்கும் இந்தியா.!
தற்போது, இந்திய ராணுவத்தின் வளர்ச்சியை கண்டு பாகிஸ்தானும் சீனாவும் ஆடிப்போயுள்ளன. இந்தியா விமானப்படையில் ஆளில்லா விமானங்கள் இருந்த போதும், இஸ்ரேலிடம் இருந்து இந்தியா 54 புதிய ஆளில்லா விமானங்களையும் வ
பாகிஸ்தான்-சீனா ஆகிய இரண்டு நாடுகள் சேர்ந்து மோதினால் கூட இந்தியாவை வெல்லது கடினம். தற்போது உள்ள இந்தியாவில் ஏராளமான நவீன ஆயுதங்கள் முப்படைகளிலும் குவிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், பல்வேறு போர் பயிற்சிகளும் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ஓராண்டுக்குள் இந்தியா முப்படைகளும் அதி நவீனத்தில் துல்லியமாக தாக்குதல் நடத்தும் இந்தியாவாக உருவெடுத்து விடும்.
தற்போது, இந்திய ராணுவத்தின் வளர்ச்சியை கண்டு பாகிஸ்தானும் சீனாவும் ஆடிப்போயுள்ளன. இந்தியா விமானப்படையில் ஆளில்லா விமானங்கள் இருந்த போதும், இஸ்ரேலிடம் இருந்து இந்தியா 54 புதிய ஆளில்லா விமானங்களையும் வாங்குகின்றது.

சீனாவின் விங் லூங்-11 டிரோன்:
சீனாவிடம் இருந்து விங் லூங்-11 என்ற அதி நவீன டிரோன்களை வாங்க பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் 48 டிரோன்களை பாகிஸ்தான் வாங்க இருக்கின்றது. இந்த டிரோன்களின் மதிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் இதன் விலை குறைந்தாகவே இருக்கும் என்று கூறுப்படுகின்றது.
டிரோன்களின் சிறப்பு:
விங் லூங்-11 டிரோன்களில் ஆளில்லாமல் இலக்கை தாக்கி அழிக்க முடியும். இந்த டிரோனில் பிஏ-7 ஏவுகணையும், வ்வைஇசட்-212 லேசர் வழிகாட்டி வெடிகுண்டு, வ்வைஇசட் 102ஏ ஆன்டி பர்சனல் வெடிகுண்டு, 50 கிலோ கிராம் எடை உள்ள எல்எஸ் 6 மினியேச்சர் வழிகாட்டி குண்டு உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த டிரோன்களை ஆளில்லாமல் அதில் பொருத்தியுள்ள அதிநவீன ஏன்டாக்களம் நவீன கேமராக்களின் வாயிலாக இலக்கை தாக்கி அழிக்கும்.

டிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:
இந்த விங் லூங்-11 டிரோன் 1,100 கிலோ எடை கொண்டது. மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும். 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். மேலும் வான் வெளியில் இருந்து கீழே உள்ள 16 ஆயிரம் அடி ( 5 ஆயிரம் மீட்டர்) இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை இருக்கின்றது.

இந்தியாவிடம் அணு ஆயுதங்கள்:
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் இந்தியா ஹெலிகாப்படர், போர் விமானங்கள், போர் கப்பல்கள் , டிரோன்கள், நவீன துப்பாக்கிகள், டாங்கிகள், ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பம், ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை இறங்குமதியும் செய்து வருகின்றது.
ஒரு போர் கருவிகள் இந்தியாவுக்கு வந்து விட்டன. மொத்த மாக வைத்து பார்க்கையில், இந்தியாவின் அணு ஆயுதங்கள் பரவலாக விரிந்து வருகின்றது. இது ரஷ்யாவுக்கு சீனாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இருக்கின்றது.

பாகிஸ்தான் இறங்குமதி:
பாகிஸ்தான் சீனாவிடம் இருந்தோ பெரும்பாலும் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகின்றது. நவீன ஆயுதங்கள் வாங்கினாலும், இதற்கு மாற்றாக இந்தியா செயல்பட்டு அதையே மிஞ்சும் தொழில்நுட்ப ஆயுதங்களையும் வாங்கி குவித்து வருகின்றது. இந்தியா இது பாகிஸ்தானுக்கும் ஆப்பு வைக்கும் விதமாகவும் இருந்து வருகின்றது.

சீனாவுக்கு ஆப்பு:
இந்திய கடற்பகுதியில் வேவு பார்த்து வந்த சீனாவுக்கும் ரஷ்யாவிடம் இருந்து போர் கப்பல்கள், அமெரிக்காவிடம் இருந்து நீர் மூழ்கி கப்பலை அழிக்கும் ஹெலிகாப்டர், அதிக எடையில் உள்ள ராணுவ தளவாடப் பொருட்களையும் எடுத்துச்செல்ல விமானம், அப்பாசி போர் விமானங்களையும் வாங்கி குவித்து வருகின்றது.

54 ஹாரோப் விமானங்கள்:
எதிரியின் இலக்கைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் வல்லமை மிக்க 54 இஸ்ரேலிய ஆளில்லா ஹாரோப் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட உள்ளன.

110 விமானங்கள் கையிருப்பு:
இதற்கான பேச்சுவார்த்தையில் இந்திய மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் போர்க்களத்தில் இந்திய விமானப்படை ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கான திறன் அதிகரிக்கும். ஏற்கனவே விமானப்படையிடம் 110 ஆளில்லாத விமானங்கள் கைவசம் உள்ளன.

ராடார் கருவிகளையும் அழிக்கும்:
ராடார் கருவிகளையும் கண்காணிப்பு கருவிகளையும் தாக்கி அழிப்பதுடன், படைக்குவிப்பு மிக்க இடங்களிலும் இவை பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடும். இந்நிலையில், புதிதாக 54 ஆளில்லாத விமானங்களை வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

போர் வந்தாலும் களத்தில் இறங்கி அடிக்கும்:
ஒருவேளை இந்தியாவை சீனா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து தாக்கினாலும் கூட களத்தில் இறங்கி அடிக்கும் இந்தியாவின் படை பலம் அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒரு நாட்டை ராணுவ வளர்ச்சியால் தான் மற்ற நாடுகள் நடுங்கும். இந்தியாவின் வளர்ச்சியை கண்டு தற்போது சீனாவும் பாகிஸ்தானும் நடுநடுங்கி போய் உள்ளன.


Click it and Unblock the Notifications








