3000 கிலோ விமானத்தை இழுத்து உலகையே அதிரவிட்ட நாய் ரோபோ.!
எதிர்காலத்தில் ரோபோக்கள் தான் உலகை ஆட்சியும் என்றால், நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இன்று பிரசவம் பார்ப்பது முதல் மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு தொழில்களிலும் புகுந்து விட்டது ரோபோக்கள்
எதிர்காலத்தில் ரோபோக்கள் தான் உலகை ஆட்சியும் என்றால், நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இன்று பிரசவம் பார்ப்பது முதல் மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு தொழில்களிலும் புகுந்து விட்டது ரோபோக்கள்.

இன்று இளம் தலைமுறையினர் முதல் அனைவரும் வேகமாக நோக்கி வருது இந்த ரோபோக்களைத்தான்.
நாயை போல வடிவமைக்கப்பட்ட ரோபோ தற்போது 3 ஆயிரம் கிலோ எடையுள்ள விமானத்தை இழுத்து உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இத்தாலி வடிவமைப்பு:
இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினர் சார்பில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் ஹை க்யூ ரியல் (HyQReal) என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

3 ஆயிரம் கிலோ சிறிய ரோபோவை இழுத்தது:
இந்த ரோபோவின் இழுவைத் திறனைச் சோதிக்க விரும்பிய அவர்கள் விமானம் ஒன்றை இழுக்க வைக்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இதன் கால் பகுதிக்கு வழுக்காமல் இருக்க சிறப்பு ரப்பர் பொருள் பொருத்தப்பட்டது. இதையடுத்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட சிறிய ரக விமானத்தை ஹை கியூ ரியல் இழுத்துச் சென்றது.

127 கிலோ எடையுள்ள ரோபோ:
வெறும் 127 கிலோ எடை கொண்ட அந்த ரோபோ விமானத்தை 30 அடி தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து குறிப்பிட்ட ரோபோவை செயல்பாட்டுக்கு கொண்டவர இருப்பதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர்.

சாதனையாக பார்க்கப்படுகிறது:
3 ஆயிரம் கிலோ எடையுள்ள சிறிய விமானத்தை 127 கிலோ எடையுள்ள ரோபோ 30 அடி தூரம் இழுத்து சென்றது பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது. மேலும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications