எரிமலையில் விழுந்த இடியை பதிவு செய்து அசத்திய விஞ்ஞானிகள்.!
எரிமலையில் இருந்து 40 மைல் தொலைவில் பூம் மைக் மூலம் இடி விழும் சத்தத்தை விஞ்ஞானிகள் பதிவு செய்தனர். மேலும் கடந்த ஆண்டு மிக அதிகமாக எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பம் கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது, அவ்வாறு வடக்கும் பிசிபிக் பெருங்கடல் தீவில் இருக்கும் எரிமலை மீது இடி விழுந்ததை விஞ்ஞானிகள் முதன்முறையாக பதிவு செய்துள்ளனர்.

எரிமலை (Volcano) என்பது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்புஇ சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்ற அம்சங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக பாறைகளை வெளித்தள்ளும் நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை தொடர்புள்ளது. "வால்கனோ"(volcano) என்ற சொல் இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக் கடவுளான வால்கன் என்னும் பெயரிலிருந்து பெற்றதாகும்.

பொதுவாக டெக்டோனிக் அடுக்குகள் விலகுகின்ற அல்லது நெருங்குகின்ற இடங்களில் எரிமலைகள் காணப்படுகின்றன. ஒரு மத்திய-கடல் மலைமுகடுஇ உதாரணத்திற்கு மத்திய அட்லாண்டிக் மலைமுகடுஇ டெக்டோனிக் அடுக்குகள் விலகிச் செல்வதால் ஏற்பட்ட எரிமலைகளுக்கு சான்றுகளாக உள்ளன.
பொதுவாக வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டது அலூசியன் தீவுகள், இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு வானம் மேகமூட்டத்துடன் பெரும் இடி இடித்துக் கொண்டிருந்தது, இந்த ஒலியை புவிஇயற்பியல் விஞ்ஞானிகள் ஒலிபதிவு செய்துவிட்டு, அதை கேட்டுக்கொண்டிருந்தனர்.

அந்தசமயம் வழக்கத்துக்கு மாறாக இடி ஒலி இருந்ததைக் கண்ட விஞ்ஞானிகள், குறிப்பிட்ட மணி நேரத்தைக் கொண்டு அன்றைய தினத்தில் தீவில் நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்தனர். அந்த குறிப்பிட்ட மணி நேரத்தில் இடி விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் உனர்ந்தனர்.

எரிமலையில் இருந்து 40 மைல் தொலைவில் பூம் மைக் மூலம் இடி விழும் சத்தத்தை விஞ்ஞானிகள் பதிவு செய்தனர். மேலும் கடந்த ஆண்டு மிக அதிகமாக எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications