அதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.!
அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவும் அதிர்ந்து போயியு
அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது.

இதனால் அமெரிக்காவும் அதிர்ந்து போயியுள்ளது. இது டிரப்பையும் ஒருகனம் தூக்கி வாரி போட்டுள்ளது. இதற்கு பின்னணியில் ரஷ்யா இருக்கும் என்று அமெரிக்கா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.

டிரம்ப் உடன் கிம் ஜோங் உன்:
வடகொரிய அதிபர் ஜிம் ஜோங் உடன் அமெரிக்கா அதிபர் டிரம்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

2ம் சந்திப்பு தோல்வி:
டிரம்ப்-ஜிம் ஜோங் உடனான சந்திப்பின் போது, தங்கள் நாட்டு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கமாறு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றகவில்லை. இதையடுத்து, பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு சென்று விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பிறகு, இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் செய்து 3வது உச்சி நாட்டு சம்மதம் தெரிவித்தனர்.

அணு ஆயுத சோதனைகள் நிறுத்தம்:
இந்த நாள் வரை அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைத்திருந்தது. மேலும், ஆனால், அமெரிக்காக கூறிய படி நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கவில்லை.

முதல் முறையாக சந்திப்பு:
வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ரஷ்ய அதிபரும் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னும் சந்தித்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 24ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டிற்கு வருவதாக வடகொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அன்று புதின்- கிம் ஜோங் உன் சந்திப்பு நிகழும் என்று சொல்லப்படுகின்றது. மேலும் பல்வேறு முக்கிய முடிவுகளையும் இருவரும் எடுப்பதாக கூறப்படுகின்றது.

சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை:
அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில், "நிலம், கடல் மற்றும் விமானத்தில் இருந்து செலுத்தும் வகையிலான ஆற்றல் மிக்க ஆயுதம் சோதித்து பார்க்கப்பட்டதாகவும், இந்த ஆயுதம் பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும்:
எனினும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயுதம் அணு ஆயுத வகையை சேர்ந்ததா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தை சார்ந்ததா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதே சமயம் இது ஒரு குறுகிய தொலைவிலான ஆயுதம் என வடகொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் பின்னணியில் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருக்காலம் என்று அமெரிக்கா வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications