இந்தியாவின் ஏசாட் சோதனைக்கு பென்டகன் ஆதரவு: கதறும் பாக்.சீனா.!
வல்லரசு நாடுகள் கூட செய்யாத நிலையில் இந்திய வளர்ந்து வரும் நாடக இருந்து போது மற்ற நாடுகள் இந்தியாவை வியந்து பார்த்தன. நாசா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இது இந்தியா சுட்டு வீழ்த்தியதால், செயற்க
உளவு பார்க்கும் எதிரி நாடுகளின் செயற்கைகோள்களை சுட்டு வீழ்த்தும் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
மேலும், இதை பிரதமர் நரேந்திய மோடி இந்தியாவின் ஆன்டி சேட் லைட் ஏவுகணை வெற்றி பெற்றுள்ளது.
என்றார்.

வல்லரசு நாடுகள் கூட செய்யாத நிலையில் இந்திய வளர்ந்து வரும் நாடக இருந்து போது மற்ற நாடுகள் இந்தியாவை வியந்து பார்த்தன.
நாசா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இது இந்தியா சுட்டு வீழ்த்தியதால், செயற்கைகோள் குப்பை கழிவுகள் விண்வெளியில் மிதக்கின்றது. சர்வதேச விண்வெளிக்கு நிலையத்துக்கு ஆபத்தாகியுள்ளது என்று தெரிவித்தது.

மிஷன் சக்தியில் ஏசாட்:
விண்வெளியில் இருந்து உளவு பார்க்கும் எதிரி நாட்டு செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் திட்டத்திற்கு இந்தியா மிஷன் சக்தி என்று பெயரை வைத்தது. மேலும், இந்த திட்டம் வெற்றியடைந்தால், பெரும் மகிழ்ச்சியடைந்தது. வல்லரசு நாடுகளுடன் இணையாக இந்தியா உருவெடுத்துள்ளது. விண்வெளியில் தனது பாதுகாப்பையும் உறுதி செய்தது.

4 வது நாடு இந்தியா:
இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதம் (ஆன்டி சேட்லைட் வெப்பன்) வைத்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா அடுத்ததாக 4 வது நாடாக இந்தியா இடம் பிடித்தது. வல்லரசு நாடுகளையும் இந்தியாவின் செயல் ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது.

நாட்டு மக்களுக்கு மோடி அறிவிப்பு:
20-22 கி.மீ. உயரம் வரையில் உள்ள புவிமண்டலத்துக்கு உட்பட்ட தூரத்திலோ, புவி மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளையோ இந்த ஏவுகணையால் தாக்க முடியும். இந்த தகவலை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து:
ஆனால் இந்த செயற்கை ஏவுகணை சோதனை மூலம் விண்வெளியில் உருவாகும் குப்பைகள் மற்ற செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறப்பட்டது. தற்போது இந்த சோதனை மூலம் உருவாகி உள்ள குப்பைகளால் சர்வதேச விண்வெளி நிலைபாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

விண்வெளியில் உடைந்த 400 பாகங்கள்:
இந்தியா ஏ-சாட் எனும் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை தாக்கி அழித்து நடத்திய சோதனை உண்மையில் பயங்கரமானது. ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது.

பெரும் ஆபத்து:
இதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது.. விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக, பெரியளவில் இருக்கிறது. இந்த பாகங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது.

செயற்கைகோள்களும் இடையூறு:
இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வுகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்போது, விண்வெளியில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும். இதற்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

பென்டகன் இந்தியாவுக்கு ஆதரவு:
இந்நிலையில், பாதுகாப்புத்துறை தொடர்பான செனட் சபை குழுவில் ஆஜராகி விளக்கம் அளித்த பென்டகன் உயரதிகாரி ஜான் ஹைட்டன் ((US Strategic Command Commander General John E Hyten)), இந்தியா தங்கள் நாட்டிற்கு விண்வெளியில் இருந்து எழும் அச்சுறுத்தல்களை கருதியே அவர்கள் அந்த சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு:
ஏசாட் சோதனையை இந்தியா நடத்த வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது என செனட் குழு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த ஜான் ஹைட்டன், விண்வெளியிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என இந்தியா நினைத்ததாலேயே ஏசாட் சோதனை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications