ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது- இனி பிரச்சனை இல்லை-ஐ.நா தகவல்.!
ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16 ஆம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐநா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரனங்களை பாதுகாப்பது இந்த ஒசோன் படலம் ஆகும்.

அதன்படி இந்த ஓசோன் வாயுப் படலத்தில் துளை விழுந்துள்ளது என்று ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் என்பவர் தான் முதலில் கண்டறிந்தார். குறிப்பாக குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் தான் ஓசோன் படலம் அதிகமாக பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.

தொழில்நுட்ப வளர்சி
பின்பு தொழில்நுட்ப வளர்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன,அதன்படி குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்பட்டது.

ஐ.நா சபை
தற்சமயம் ஒசோன் படத்தில் உண்டான துளை மெல்ல மெல்ல சரியாக வருவதாக ஐ.நா சபை தகவல் தெரிவித்துள்ளது, குறிப்பாக ஒசோன் படலத்தை பாதுகாப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய நிலைக்கு வந்துவிடும்
அதன்படி வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் தனது பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் இப்போது கணிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பல்வேறு பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

செப்டம்பர் 16
ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16 ஆம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐநா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications