Just In
- 1 hr ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 2 hrs ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 2 hrs ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 3 hrs ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது?
கடந்த 1961 ஆம் ஆண்டில், போலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானியான காசிமியர்ஸ் கொர்டைல்ஸ்கிஸ்கி முதன்முறையாக இந்த நிலவுகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்களைக் கவனித்து வந்தார்.
ஹங்கேரிய நாட்டை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு, ஒரு நீண்ட கால வானியல் ஊகத்தை உறுதிப்படுத்தியுள்ளது: பூமிக்கு மொத்தம் மூன்று இயற்கையான செயற்கைக்கோள்கள் அதாவது நிலவுகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகளில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி பற்றிய விளக்கவுரையில், இந்த புதிய நிலவுகள் ஆனது முற்றிலும் ஒரு மில்லிமீட்டர் அளவுக்கும் மிகக் குறைந்த அளவிலான தூசி துகள்களால் உருவாகி உள்ளன என்றும், பிரகாசத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக அவைகள் மங்கலான பிரதிபலிப்பை மட்டும் வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
400,000 கிலோமீட்டர் தொலைவில்!
இதுபோன்ற காரணங்களால் தான் அவைகள் பூமியில் இருந்து 400,000 கிலோமீட்டர் தொலைவில் (அதாவது பூமியின் "பெரிய" நிலா இருக்கும் அதே தொலைவில்) இருந்தும் கூட அவைகள் ஆய்வில், ஆராய்ச்சியில், வானவியல் கண்காணிப்பில் சிக்கவில்லையாம். அதற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம், "விண்மீன் ஒளி, நட்சத்திர ஒளி, வானியல் ஒளி மற்றும் வான்வெளி மின்மினுப்பு போன்றவைகள் இல்லாமல் விண்ணில் மேகங்களை கண்டறிவது மிகவும் கடினம் "என்று ஈபோஸ் லோரண்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆறு தசாப்தங்களாக!
கடந்த 1961 ஆம் ஆண்டில், போலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானியான காசிமியர்ஸ் கொர்டைல்ஸ்கிஸ்கி முதன்முறையாக இந்த நிலவுகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்களைக் கவனித்து வந்தார். அந்த காரணத்தினால் அவைகள் கொர்டைஸ்விஸ்ஸ்கி டஸ்ட் மேகங்கள் (KDCs) என்று பெயரிடப்பட்டனர். இருந்தாலும் கூட, கடந்த ஆறு தசாப்தங்களாக இந்த நிலவுகளின் இருப்பின் மீது வானியலாளர்கள் வினா எழுப்பியா வண்ணம் உள்ளனர். அதற்கு ஏற்றபடி இந்த நிலவு பொருட்களின் பல துல்லியமான மாதிரிகள் அல்லது உருவகப்படுத்துதல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இவைகளின் அளவு என்ன?
தற்போதைய ஆய்வை பொறுத்தவரை, ஹார்வாட் மற்றும் அவருடைய குழுவினர் தங்கள் கேமராக்களிலுள்ள சிறப்பு வடிப்பான்களைப் (பில்டர்களை) பயன்படுத்தி உள்ளனர். இது இந்த நிலவில் உள்ள தூசித் துகள்களிலிருந்து சிதறடிக்கப்பட்ட ஒளியைப் பிடிக்க மற்றும் ஆய்வு செய்ய போதுமான உள்வரும் வெளிச்சத்தை கொடுக்கிறது. இம்மாதிரியாக சேகரிக்கப்பட்ட தரவுகளுடன், இந்த கேடிசி எனப்படும் மேகங்கள் ஆனது விண்வெளியில் சுமார் 70,000 கி.மீ. முதல் 1,00,000 கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 30-ல் 20 சந்திர டிஸ்க்குகளுக்கு சமம்.
இவைகள் ஏன் மிகவும் சிக்கலான விண்வெளி பொருளாக இருக்கிறது?
ஏற்கனவே மிகவும் பழமையான இந்த மேகங்களை (நிலாக்கள்) அதன் துகள்கள் மாற்றமடைய வைத்து கொண்டே இருக்கிறது என்றும் அதனால் தான் அவைகள் காலப்போக்கில் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நாம் இங்கு பேசும் துகள்கள் ஆனது விண்வெளியில் உள்ள கிரகங்கள், வால்மீன்கள், விண்கற்கள், எரிமலைகள் மற்றும் விண்வெளியில் சுற்றிவளைக்கின்ற பிற பொருள்களில் இருந்து கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமி, சூரியன் அல்லது சந்திரன் ஸ்திரமின்மையைக் கொண்டிருக்கும் போது, துகள்கள் அவற்றின் புவியீர்ப்புடன் ஒட்டிக்கொள்கின்றன, மேலும் பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் துகள்களும் அவற்றை அடைய செய்து கொண்டே இருக்கிறதாம்.
இதுவும் நிலவு தான் என்பதற்கு என்ன ஆதாரம்?
இந்த மேகங்கள் ஆனது எல்5 புள்ளி என்று அழைக்கப்படும் ஒரு விண்வெளி சிறப்பு புள்ளியின் அருகில் இருப்பதை கொர்டைல்ஸ்கிஸ்கி கண்டு அறிந்தார். எல்5 புள்ளி எனது பூமி மற்றும் நிலவு ஈர்ப்பு விசை இருக்கும் ஒரு லக்ரேன்ஜ் புள்ளி ஆகும். லக்ரேன்ஜ் புள்ளி என்பது விண்ணில் உள்ள சமநிலையின் இடங்களாகும், அங்கு புவி மற்றும் நிலவு போன்ற இரு பெரிய மற்றும் திடமான வானியல் பொருட்களின் ஈர்ப்பு சக்திகள் மையவிலக்கு விசைகளை வெளியேற்றும். இந்த லக்ரேன்ஜ் புள்ளிகளால் ஏராளமான சிறிய வானியல் பொருள்கள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த மேக வடிவிலான நிலவுகள் நமக்கு முக்கியம்?
சூரிய - பூமி ஈர்ப்பு அமைப்பு மற்றும் சூரிய - வியாழன் அமைப்பு ஆகியவற்றின் லக்ரேன்ஜ் புள்ளிகளுக்கு நெருக்கமான சிறு கிரகங்கள் உள்ளன. இத்தகைய புள்ளிகளில் எரிபொருள் நுகர்வு குறிப்பிடத்தக்க அளவு குறைவாக இருப்பதால், அவைகளை செயற்கைகோள் நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது சூரியன் உட்பட இதர கிரகங்களை நீண்ட காலம் ஆய்வு செய்யும் விண்வெளி வாகனங்களுக்கான இடை நிலையங்களாக மற்றும் பரிமாற்ற நிலையங்களாக அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவைகள் விண்வெளி ஆராய்ச்சிக்கான திட்டங்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கும். பூமி நிலவு அமைப்பு போன்ற இரு உடல் அமைப்புகளில் மட்டுமே இதுவரை மொத்தம் ஐந்து புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளிலும் லக்ரேன்ஜ் புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் வேண்டாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470