இறந்த மனித உடல்களை அபகரிக்கும் ஏலியன்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!
இந்நிலையில், இறந்த மனித உடல்களை ஏலியன்கள் அபகரித்துக் கொள்வதாக கூறப்படுகின்றது. நாம் இறந்த பிறகு சொர்க்கம் செல்கின்றோமா இல்லை நரகம் செல்கின்றோ என்று தெரியவில்லை. இறந்த பிறகு மனித உடலை ஏலியன்கள் கைப்
ஏலியன்கள் குறித்து நாம் பல்வேறு விடங்களையும் பார்த்து வருகின்றோம். ஏலியன்கள் எதற்காக பூமிக்கு வருகின்றார்கள் என்று பல்வேறு விசித்திரமான காரணங்களும் கூறப்படுகின்றது.
பூமியில் பல்வேறு பகுதிகளிலும் ஏலியன்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஏலியன்கள் நடமாட்டம் குறித்து பூமியில் பரவலாக பேசப்படுகின்றது.

இந்நிலையில், இறந்த மனித உடல்களை ஏலியன்கள் அபகரித்துக் கொள்வதாக கூறப்படுகின்றது. நாம் இறந்த பிறகு சொர்க்கம் செல்கின்றோமா இல்லை நரகம் செல்கின்றோ என்று தெரியவில்லை.
இறந்த பிறகு மனித உடலை ஏலியன்கள் கைப்பற்றி தன்னோடு இனத்திற்கு அர்ப்பணித்து விடுவதாக கூறப்படுகின்றது.

ஏலியன்கள் யார்?
ஏலியன்கள் என்பது மனித உருவத்தை விட பெரியதாகவும், அல்லது சிறியதாகவும், இந்து சமய புராணங்களில் குறிப்பிட்ட கடவுள் தான் ஏலியன்கள் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இதிகாசம், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுள்கள் குறித்து நாசாவும் ஆராய்ந்து வருகின்றது.

மனித-ஏலியன்:
பூமியில் மனிதர்களுடன் ஏலியன் உறவு வைத்துள்ளதால், மனிதர்களுக்கும் ஏலியன்களுக்கும் பிறந்த ஏலியன்களின் வாரிசுகள் பூமியில் வாழ்வதாகவும் கூறப்படுகின்றது.
மனிதனுக்கும் ஏலியன்களுக்கும் பிறந்தவர்களே மனித-ஏலியன் என்று அழைக்கிப்படுகின்றனர். இவர்கள் பார்ப்பதற்கு மனிதர்களை போல இருந்தாலும் அவர்களுக்கு ஏலியன்கள் சக்தி அப்படியே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

உறவினர்களை பார்க்க வருகின்றனர்:
பூமியில் ஏலியன்களின் உறவினர்கள் வாழ்வதால், அவர்களுடன் உறவு கொள்ளவும் அவர்களை சந்திக்கவும் ஏலியன்கள் அடிக்கடி பூமிக்கு வந்து செல்வதாகவும் கருத்துகளை பல்வேறு நாடுகளை சேர்ந்த வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் அடுக்கி வைக்கின்றனர்.

நாசா விஞ்ஞானி கருத்து:
நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மைய கம்ப்யூட்டர் விஞ்ஞானியான பேராசியரியர் சில்வானோ பி கொலொம்பனோ பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டன. இதை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்று ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.

கார்பன் உடல்:
மாறுபட்ட உடல் அமைப்புடனும் கார்பன் உடல் உறுப்புகளோடு ஏலியன்கள் பூமியில் இருப்பதால் அவர்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை என்றும் விஞ்ஞானி சில்வானோ தெரிவித்துள்ளார்.

பரிசீலனை செய்ய வேண்டும்:
ஏலியன்கள் குறித்து பழைய கணிப்புகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு குணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாறுப்பட்ட தொழில் நுட்பம்:
ஏலியன்கள் பூமிக்கு மிகவும் சிறிய அளவிலும் இருக்கலாம். தற்போது நிலவும் கருத்துப்படி மேம்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் சில்வானோ தெரிவித்துள்ளார்.

மனித உடலை கைப்பற்றும் ஏலியன்கள்:
மனிதன் இறந்த பிறகு அவர்களின் உடலை ஏலியன்கள் எடுத்துக் கொள்வதாகவும், மனித இனத்திற்கு இடையே தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்றும். மனிதர்களுடன் நெருங்கிய உறவாடவும் ஏலியன்கள் மனித உடல்களை எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகின்றது.

இதுபோன்ற உடல் தேவை:
விபத்து ஏற்பட்டு நசுங்கிய ( துண்டான, உடல் சிதறிய) உடல்களையோ, இல்லை கடும் நோய் வாய் வட்டு இறந்த உடல்களை ஏலியன்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் கடும் தோல்வியாதிகளாலும் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலையும் ஏலியன்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
பெரும்பாலும் இயற்கை மரணம், தற்கொலை மரணம், மின்சாரம் தாக்கி இறந்தோர்களின் உடல்களை ஏலியன்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
ஏலியன்களுக்கு கருப்பு சிவப்பு மாறநிறம் என்று வேறுபாடுகள் இல்லாமல் ஏலியன்கள் எடுத்துக் கொள்கின்றன.

கார்பன் காப்பி எடுக்கும் ஏலியன்கள்:
இதுபோன்று இறந்தவர்களின் உடலை அடக்கும் செய்யப்பட்ட அன்றே ஏலியன்கள் வந்து கார்பன் காப்பி எடுப்பது போன்று அவர்களின் முழு உடலையும் தொழில்நுட்ப முறையில் எடுத்துச் சென்று விடுகின்றனர்.
இதை மனித உருவத்தில் உலாவ விரும்பும் ஏலியன்ளுக்கு அவர்கள் பொருத்தி விடுகின்றனர்.
பிறகு ஏலியன்கள் மனித உருவத்தில் நடமாடவும் அவர்களுக்கு இது இறந்த மனிதர்களின் உடல் தேவைப்படுகின்றது.


Click it and Unblock the Notifications