ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் உருவாகும் ஸ்கைபோர்க் ட்ரொன்கள்.!
ஏர் போர்ஸ் நிறுவனம் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் புதிய தானியங்கி டிரோன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய டிரோன்களுக்கு "ஸ்கைபோர்க்"(Skyborg) என்று பெயரிட்டுள்ளது.
ஏர் போர்ஸ் நிறுவனம் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் புதிய தானியங்கி டிரோன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய டிரோன்களுக்கு "ஸ்கைபோர்க்"(Skyborg) என்று பெயரிட்டுள்ளது.

போர்க்களத்தில் இருக்கும் விமான பைலட்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்படவுள்ளது.

ஸ்கைபோர்க் ஏ.ஐ டிரோன்
இந்த புதிய ஸ்கைபோர்க் ஏ.ஐ டிரோன்களில், இதுவரையில் பயன்படுத்தப்படாத பல புதிய தொழில்நுட்பங்களைச் சேர்ப்பதற்கு ஏர் போர்ஸ் திட்டமிட்டுவருகிறது. இதுவரை விமானங்கள் மற்றும் டிரோன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்து வருகிறது.

புதிய ஏர் போர்ஸ் டிரோன்கள்
இந்த புதிய டிரோன்கள், விமானத்தின் தகவல்கள், நிலப்பரப்பு விபரங்கள், தடைகள் மற்றும் அபாயகரமான வானிலை போன்ற அணைத்து விபரங்களையும் ஆரையும் விதத்தில் உருவாக்க வேண்டும் என்று ஏர் போர்ஸ் விரும்புகிறது.

மனிதர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஏ.ஐ
மனிதர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஏ.ஐ ஸ்கைபோர்க் டிரோன்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஸ்கைபோர்க் டிரோன் இன் மாதிரியை ஏர் போர்ஸ் தற்பொழுது உருவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஸ்கைபோர்க் டிரோன்
கூடிய விரைவில் ஸ்கைபோர்க் டிரோன்னை ஸ்டெல்த் மோடு உடன் ஏர் போர்ஸ் வரும் 2023 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் நிறுவனத்துடன் இணைந்தும் இந்த ஸ்கைபோர்க் ஏ.ஐ டிரோன்கள் உருவாக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications