ஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.!
சென்னை மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக்கோள் வானிலை நிலவரங்களை துள்ளியமாக அறிவதற்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றனர், அதன்படி சென்னை மாணவர்களின் கடும் முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை வரும் ஆகஸ்ட் மாதம் நாசா விண்ணில் ஏவுகிறது.

மேலும் மாணவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் (ஜெய்ஹிந்த் எஸ்1)மிகவும் குறைந்த அளவு எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதை சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைக்கோள் எதற்கு பயன்படும்.!
சென்னை மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக்கோள் வானிலை நிலவரங்களை துள்ளியமாக அறிவதற்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரூ.15,000/-செலவில் முழுக்க முழுக்க நைலானை கொண்டு இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குயூப்ஸ் இன் ஸ்பேஸ்
தற்சமயம் மாணவர்கள் உருவாக்கியுள் இந்த செயற்கைக்கோள் நாசா நடத்தும் குயூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

64 கிராம் எடை
இதற்கு முன்பு 64 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளே குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளாக இருந்தது, தற்சமயம் சென்னை மாணவர்கள் அந்த சாதனை முறியடிக்கும் வகையில் தற்போது 33.39 கிராமில் செயற்கோள் உறுவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா
சனிக்கிரகத்திற்குப் பல நிலவுகள் உள்ளன. அவற்றுள் ஆறாவது பெரிய நிலவு என்ஸ்லேடஸ் (Enceladus) என்பதாகும். இந்நிலவு 314 மைல் (505 கி்.மீட்டர்) விட்டமுடையது. இது குளிர் நிலவாகும் (icy moon). இந்நிலவில் மிகப்பெரிய வலுவான கூட்டு ஆர்கானிக் மூலக்கூறுகள் இருப்பது நாசாவின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நாசா சனிக்கிரகத்துக்கு அனுப்பி வைத்த காசினி விண்வெளி ஓடம் (Cassini spacecraft) இதனைக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் இக்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications