Home
Scitech

சந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு! என்னது அது?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திராயன் 2 திட்டத்தை பற்றிய அறிமுகமே தேவை இல்லை என்று நம்புகிறோம். ஏனெனில் அறிவியல் உலகின் அத்துணை கண்களும் தற்போது அதன் மீது தான் உள்ளது.

சமீபத்திய ஆய்வு ஒன்று

சமீபத்திய ஆய்வு ஒன்று

ஆனால் இஸ்ரோவின் கண்களோ சந்திராயன் 2 விண்கலத்தின் வெற்றிகரமான பாய்ச்சல், ஏவல் மற்றும் தரை இறக்கம் மீது உள்ளது.அது சார்ந்து பல வகையான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று, நிலவின் குறிப்பிட்ட இடத்தில் மர்மமான பொருள் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. இந்த இடம் ஏன் கருத்தில் ஏன் கொள்ளப்படுகிறது என்றால் - அந்த இடத்தில் தான் சந்திரயான் 2 தரை இறங்க தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள இடமாகும்.

அடியிலிருக்கும் குறிப்பிடப்படும்

அடியிலிருக்கும் குறிப்பிடப்படும் "மர்மமான பொருள்" !

சந்திரனின் மேற்பரப்பில் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு உள்ள மர்மமான பொருள் ஆனது வெகுஜன பொருளாகும், அதாவது மாஸ் (Mass) ஆகும். இந்த வெகுஜனமானது சந்திரனின் தென் துருவ-ஐட்கன் படுகையில் உள்ள ஒரு பள்ளத்தின் கீழ் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் நிலவின் மீது மோதிய சிறுகோள் மூலமாகவே இந்த பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், அதற்கு அடியிலிருக்கும் குறிப்பிடப்படும் "மர்மமான பொருள்" ஆனது அதன் உலோக எச்சங்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஹூவாய் பிக் தீவை விட ஐந்து மடங்கு பெரிய உலோகக் குவியல்!

ஹூவாய் பிக் தீவை விட ஐந்து மடங்கு பெரிய உலோகக் குவியல்!

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்டு "மாஸ்" ஆனது சுமார் 2.18 × 10 ^ 18 கிலோகிராம் அளவிலான நிறை கொண்டு உள்ளது மற்றும் அது சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 300 கி.மீ ஆழத்தில் புதைந்து உள்ளது. "அதாவது ஹூவாய் பிக் தீவை விட ஐந்து மடங்கு பெரிய உலோகக் குவியல் ஆனது நிலத்தடிக்குள் புதைந்து இருப்பதை போன்று கற்பனை செய்து பாருங்கள்" என்று பேலர் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வு ஆசிரியர் பீட்டர் ஜேம்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "இது நாங்கள் எதிர்பாராத அளவிலான ஒரு வெகுஜனம்." என்றும் அவர் தெரிவித்து உள்ளார். ஆராய்ச்சியாளர்களுக்கு இரண்டு கோட்பாடுகள் உள்ளன: முதலாவது, வெகுஜனமானது ஒரு சிறுகோளிலிருந்து உலோகமாகும், இது சந்திரனில் மோதியது, இது ஐட்கன் படுகையை உருவாக்குகிறது. நிலவின் இந்த "மாஸ்" பற்றி, ஆராய்ச்சியாளர்களுக்கு இரண்டு கோட்பாடுகள் உள்ளன:

முதல் கோட்பாடு:

முதல் கோட்பாடு:

முதலாவது கோட்பாட்டின் படி, இந்த வெகுஜனமானது ஒரு சிறுகோளிலிருந்து வெளிப்பட உலோகமாக இருக்கலாம். சந்திரனின் ஐட்கன் பள்ளத்தாக்கு உருவாகுக காரணம் இந்த மோதலாக கூட இருக்கலாம். சந்திரயான் -1 விண்கலத்தின் சில ஆய்வு முடிவுகள் இந்த கோட்பாட்டிற்கு வலுவூட்டும் வண்ணம் உள்ளன. சந்திராயன் 1 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் படி, அங்கு நீரின் "குளிர் பொறிகளின்" எண்ணிக்கையைத் தவிர, காந்தமாக்கப்பட்ட மேலோடு கொண்ட பகுதிகளும் உள்ளன.

நாசாவும் இதை உறுதி செய்துள்ளது!

நாசாவும் இதை உறுதி செய்துள்ளது!

ஆக தென் துருவ-ஐட்கன் படுகையை உருவாக்கிய பாரிய தாக்கத்தின் மையத்திலிருந்து உலோக எச்சங்கள் வெளியேற்றப்பட்டதால் தான் நிலவின் மேற்பரப்பில் ஒழுங்கின்மை (நிலவிற்கு தொடர்பு இல்லாத விடயங்கள்) நிலவுகின்றன என்று நம்பப்படுகிறது. இஸ்ரோவை தொடர்ந்து நாசாவும் இதை உறுதி செய்துள்ளது. நாசாவின் ஈர்ப்பு மீட்பு மற்றும் உள்துறை ஆய்வகத்தின் (கிரெயில்) தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், குறிப்பிட்ட சிறுகோள் ஆனது எங்கிருந்து வந்தது என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், குறிப்பிட்ட பள்ளத்தை உருவாக்கியது அந்த சிறுகோள் தானா என்பது கூட தெரியாவிட்டாலும், கூறப்படும் வெகுஜனமானது சந்திரனின் மேல்புறத்தில் அமர்ந்திருப்பதும் மற்றும் அது நிலவின் மையத்தோடு மூழ்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இரண்டாவது கோட்பாடு!

இரண்டாவது கோட்பாடு!

மற்றொரு கோட்பாடு ஆனது "இந்த வெகுஜனமானது, சந்திர மாக்மா கடல் படிகமயமாக்கலின் கடைசி கட்டத்திலிருந்து எஞ்சியிருக்கும் அடர்த்தியான ஆக்சைடுகளின் செறிவு" என்கிறது. சில விஞ்ஞானிகளின் படி, ஒரு காலத்தில் சந்திரனின் பெரும்பகுதி ஆனது உருகிய நிலையிலான மாக்மாவின் பெருங்கடலாக இருந்தது. சூரிய குடும்பம் உருவாகி 70 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இருந்ததாகக் கருதப்படும் இந்த மாக்மா கடல், படிப்படியாக அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில் திடமான சந்திரனாக உருமாறியுள்ளது.

நிலவின் ஐட்கன் பள்ளத்தாக்கு பற்றிய விவரங்கள்!

நிலவின் ஐட்கன் பள்ளத்தாக்கு பற்றிய விவரங்கள்!

தென் துருவ-ஐட்கன் படுகை என்பது நிலவின் மீதுள்ள ஒரு மாபெரும் தாக்க அமைப்பு ஆகும். ஓவல் வடிவத்தில் உள்ள அதன் வெளிப்புற விளிம்புடன் சேர்த்து சுமார் 2,000 கி.மீ நீளம் கொண்ட இந்த பள்ளத்தாக்கு ஆனது பல கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கை பூமியிலிருந்து பார்க்க முடியாது, ஏனெனில் இது சந்திரனின் முதுகு பகுதியில் அமைந்துள்ளது. இதனாலேயே இந்த குறிப்பிட்ட பள்ளம் ஆனது தொலைநோக்கிகளின் வழியாக ஆராயப்பட முடியாமல், ஆரய்ச்சியாளர்களின் கண்களில் இருந்து நிரந்தரமாக விலகியுள்ளது.

வேறு எந்த பள்ளத்தாக்கும் இந்த அளவு பாதுகாக்கப்படவில்லை !

வேறு எந்த பள்ளத்தாக்கும் இந்த அளவு பாதுகாக்கப்படவில்லை !

காலப்போக்கில், சந்திர கிரகம் ஆனது பல வகையான சிறுகோள் தாக்கங்களை சந்தித்தது, இருந்தாலும் கூட சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக கருதப்படும் ஐட்கன் படுகையை போல வேறு எந்த பள்ளத்தாக்கும் இந்த அளவு பாதுகாக்கப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
strange-mass-found-under-moons-surface-near-isros-chandrayaan-2-landing-site : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X