4-முறை தடங்கல்: 5-வது முறை சாதித்த எலன் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்.!
இந்த செயற்கைகோளை செலுத்துவதின் மூலம், மிக துள்ளியமாக நேவிகேஷன் கருவியை பயன்படுத்த முடியும்.
தொடர்ந்து அனைத்து நாடுகளும் பல அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்திய வண்ணம் உள்ளது, அந்த வகையில் 4முறை ஏற்பட்ட தடங்கலுக்கு பின்னர், அமெரிக்க ராணுவத்துக்கான செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்.

குறிப்பாக லாக் ஹீட்மார்டின் நிறுவனத்தால் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஜி.பி.எஸ். செயற்கைக்கோளை, பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ, ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டது.

மோசமான வானிலை
ஆனால் மோசமான வானிலை மாற்றம் காரணமாக 4 முறையும் கடைசி நேரத்தில் ஏவும் முயற்சியை கைவிட்டது ஸ்பேஸ் எக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை காலை 8.51 அளவில் புளோரிடாவில்
உள்ள கெனவெரலில் இருந்து பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்பேஸ் எக்சின் நிறுவனர்
குறிப்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறைக்காக ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் (பால்கன் 9 ராக்கெட் )செயற்கைகோள் என்பதால், ஸ்பேஸ் எக்சின் நிறுவனர் எலன் மஸ்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது கருதப்படுகிறது.
Pretty sweet! #falcon9 @SpaceX pic.twitter.com/GQNfO971p8
— Erin McGrath (@erinsmcgrath) December 23, 2018
மார்ட்டின் கார்ப்
இந்த பால்கன் 9 ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் வழிகாட்டி செயற்கை கோளானது (ஜி.பி.எஸ்) சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் லாக்கெட் மார்ட்டின் கார்ப் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
.@SpaceX says the #Falcon9 launch will now be at 9:34 a.m. today. https://t.co/Uf1uqBov4s pic.twitter.com/qfaNoPZ5R8
— Spectrum News 13 (@MyNews13) December 18, 2018
நேவிகேஷன்
இந்த செயற்கைகோளை செலுத்துவதின் மூலம், மிக துல்லியமாக நேவிகேஷன் கருவியை பயன்படுத்த முடியும். ஆனால் இதில் இருக்கும் சிக்கல், இதை கட்டுப்படுத்தும் தரைகட்டுப்பாட்டு கருவி இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications