வளிமண்டலத்தை ஓட்டையாக்கிய ஸ்பேஸ்X ராக்கெட்: விளைவு?
ஆகஸ்ட் 2017ல் செலுத்தப்பட்ட ஃபால்கான்9 பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஐனோஸ்பியரில் மிகப்பெரிய துளையை உண்டாக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் மிகப்பெரிய பாடத்தை கற்றுள்ளது.
ராக்கெட்கள் செலுத்தும் போது கண்கொள்ளா காட்சியாக இருந்தாலும், அதை செலுத்திய பிறகு அந்த பகுதியில் அழியாச் சுவடுகளை ஏற்படுத்திவிடுகிறது.

ஆகஸ்ட் 2017ல் செலுத்தப்பட்ட ஃபால்கான்9 பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஐனோஸ்பியரில் மிகப்பெரிய துளையை உண்டாக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் மிகப்பெரிய பாடத்தை கற்றுள்ளது.

ஃபால்கான்9 ராக்கெட்
கடந்த ஆண்டு ஃபால்கான்9 ராக்கெட் செலுத்தப்பட்ட பிறகு திரட்டிய தகவலின் படி, அது வட்டவடிவ அதிர்வலைகளை உருவாக்கியது மட்டுமின்றி ஐனோஸ்பியரில் 900 கிலோமீட்டர் அகலமுள்ள துளையை உருவாக்கியுள்ளது. மூன்று மணி நேரம் நீடித்த அந்தத் துளை, காந்த அலைகள் அந்தப் பகுதியில் திரண்டதைப் போன்றது.

சுமார் 475கிலோ
இந்த திட்டத்தின் போது மிகவும் எடைக்குறைவான ஃபால்கான்9 பயன்படுத்தியதால் தான் இது நிகழ்ந்தது. பார்மோசாட்5 செயற்கைகோளை சுமந்து சென்ற அதன் எடை சுமார் 475கிலோ. ராக்கெட்டை பொறுத்தவரை பொதுவாக நடப்பது என்னவென்றால், அது சுமக்கும் அனைத்து எடையும் அதை சாய்வு பாதையில் செலுத்தும் போது புவியீர்ப்பு விசையை குறைக்க உதவும்.

தண்ணீரின்
ஆனால் ஃபால்கான்9 மிகவும் எடை குறைவாக இருந்ததால், அதனால் நேராக செல்ல முடிந்து வானத்தை நோக்கி செங்குத்து பாதையில் சென்றது. ஆனால் இது தண்ணீரின் மீது பட்டுப் பட்டு வெகு தூரம் செல்ல வேண்டிய கல், நேராக தண்ணீரில் போட்டது போல ஆகிவிட்டது.

வல்லுநர்கள்
ஐனோஸ்பியரில் உள்ள இந்தத் துளை, நம்மை உண்மையில் பெரிய அளவில் பாதிக்காவிட்டாலும், இது போன்ற தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்ற தொழில்நுட்பங்களை குறிப்பாக ஜி.பி.எஸ் நேவிகேசன் மற்றும் ஸ்மார்ட்போன் தொலைதொடர்புகளை பாதிக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications