விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.!
பூமி மற்றும் வேற்றுகிரங்கள் கிரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து வருகின்றன. விண்வெளியில் நடக்கும் பல்வேறு மர்மங்களையும் கண்
பூமி மற்றும் வேற்றுகிரங்கள் கிரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து வருகின்றன.

விண்வெளியில் நடக்கும் பல்வேறு மர்மங்களையும் கண்டறியும் வகையிலும், ஆராய்ச்சி செய்யவும் விண்வெளியில், பல்வேறு நாடுகளின் சார்பில் நாசா சர்வதேச விண்வெளி மையம் அமைத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா சார்பில் விண்வெளிக்கு மனித ரோபோவை சோயூஸ் என்ற விண்கலன் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பிறகு, அது சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தது.

பூமி மற்றும் பல கிரங்கள்:
பூமி மற்றும் பல்வேறு கிரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பல்வேறு நாடுகளும் பல மில்லியன் கணக்கில் செலவு செய்து விண்கலன்களை அனுப்பி வருகின்றனர். இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன.

விண்வெளியில் மனிதர்கள்:
பிறகு கிரகங்களிலும் பூமியை போன்று மனிதர்கள் வாழ முடியுமா அங்குள்ள தனிமங்கள், கால நிலைகள், தட்பவெப்ப சூழ்நிலை உள்ளிட்டவைகள் குறித்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியும் ஆய்வுகள் நடந்து வருகின்றது.

ரோபோ ஆராய்ச்சி:
விண்வெளியிலும் மனிதர்களை போல உள்ள ரோபோக்களையும் அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ற நிலையில் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு செயல்பாடுகளும் இருக்கின்றன.

சர்வதேச விண்வெளி மையம்:
மனித இனத்தின் வளர்ச்சிக்காக விண்வெளியில் பல்வேறு நாடுகள் சார்பில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இங்கு தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சோயூஸ் எம்எஸ்-14:
மனித ரோபோவுடன் கூடிய ரஷ்யாவின் சோயூஸ் எம்எஸ்-14 என்ற விண்கலன் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் மனிதர்களை போலவே ஆய்வு செய்யும், எளிமைமையாகவும் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் தெரிவிக்கும்.

பெடார் ரோபோ:
சர்வதே விண்வெளி மையத்தில், தங்கி ஆய்வு செய்ய சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தவகையில், இம்முறை, கிரகங்கள் தொடர்பான ஆய்வுக்காக ரஷ்யா, புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஃபெடார்' என்ற விண்வெளி ரோபோவை அனுப்ப திட்டமிட்டது.

விண்வெளி நிலையம்:
கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து மனித ரோபோவுடன் ‘சோயூஸ் எம்.எஸ்-14' விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இதை கண்ட ரஷ்ய மக்கள் தங்கள் ஆரவாரம் செய்தனர்.

ஆண்ட்ராய்டு நுட்ப மனித ரோபோ:
ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மனித ரோபோ, வரும் 24ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கி, செப்டம்பர் 7ம் தேதி வரை விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஸ்வோர்ட்சோவ் ( Alexander Skvortsov) என்பவர் கண்காணிப்பில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும். பின்னர் பூமிக்கு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோயூஸ் விண்கலன்:
பிறகு வெற்றிகரமாக விண்வெளிக்குக்கு பாய்ந்த சோயூஸ் விண்கலன் புவி வட்ட பாதையிலும் நிலை நிறுத்தப்பட்டது. இதை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் ஆகியோர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் சென்றடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications