செவ்வாய் கிரக பயணத்தை தூரம் பாதி கடந்த விண்கலம்: உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.!
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்சைட் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரக கிரத்தை நோக்கி அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சி செய்து செயற்கை கோள்களை அனுப்பி வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ ஏற்ற சூழல் உள்ள என்று அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில், செவ்வாய்க்கும் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் செவ்வாய்க்கு விண்கலன்களை செலுத்தி வருகின்றனர்.

நாசா ஆர்வம்:
அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றது.

இன்சைட் விண்கலம்:
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்சைட் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரக கிரத்தை நோக்கி அனுப்பியுள்ளது.

பாதி தூரம் கடந்த விண்கலம்:
இன்சைட் விண்கலம் தற்போது மொத்த பயணத்தில் பாதிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

277 மில்லியன் கி.மீ தூரம்:
இன்சைட் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 107 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் சுமார் 277 மில்லியன் கி.மீ தூரத்தை கடந்து இருக்கின்றது.

98 நாட்களில் இலக்கை எட்டும்:
இந்நிலையில் எஞ்சியுள்ள 208 மில்லியன் கி.மீ தூரத்தை கடப்பதற்கு இன்னும் 98 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாயில் ஆராய்ச்சி:
செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்ப பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட் இந்த விண்கலன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ள விஞ்ஞானிகளும் மக்களும் இன்சைட் விண்கலம் வெற்றிகரமாக இலக்கை எட்டுமா என்று காத்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications