ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாதக்கணக்கில் காணாமல் போன நிலவு! காரணம் என்ன?
ஏறக்குறைய ஒரு மில்லினியத்திற்கு(ஆயிரம் ஆண்டுகள்) முன்பு, சந்திரன் பூமியின் இரவு வானத்திலிருந்து பல மாதங்களாக தொடர்ந்து மறைந்துபோய், இரவின் இருளை ஒளிமயமாக்க நமது கிரகத்திற்கு மிகவும் தேவையான சொர்க்க விளக்கை இல்லாமல் செய்துவிட்டது. 900 ஆண்டுகளுக்கு பிறகு, பூமியின் ஒரு நிகழ்வின் காரணமாக சந்திரன் விசித்திரமாக காணாமல் போனதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கலாம் என தெரிகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் இதற்கான பதில் உள்ளது. எரிமலை சாம்பல், கந்தகம் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றின் கலவையானது சந்திரனின் மறைந்துபோகும் செயலுக்கு வழிவகுத்தது என்று இந்த விஞ்ஞானிகள் குழு நம்புகிறது.

"1108-1110 ஆண்டுகளில் நடைபெற்ற 'மறந்துபோன' எரிமலை வெடிப்புகளின் காலநிலை மற்றும் சமூக தாக்கங்கள்" என்ற தலைப்பில் செய்யப்பட்ட ஆராய்ச்சி அதன் பெயருக்கேற்றாற்போல் உள்ளது என்பதை நினைவில் கொள்க. கண்ணுக்குத் தெரியாத சந்திரன் என்பது எரிமலை வெடிப்பின் விளைவாக இருந்தபோதிலும், இந்த ஆய்வு (இப்போது நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது) இதுபோன்ற வெடிப்புகள் முதலில் நிகழ்ந்தனவா என்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தியது.
NEEM-2011-S1, NGRIP மற்றும் WDC06A பதிவுகளிலிருந்து கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆராய்ச்சி. அதன்படி பூமியின் வளிமண்டலத்தில் கந்தகத்தின் செறிவில் " 1108 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஒரு திடீர் ஏற்றம்" காணப்பட்டது. 1110 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த ஏற்றம் சிதைந்து ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் உயர்ந்து அடுத்த ஆண்டின் ஆரம்ப மாதங்கள் வரை தொடர்ந்திருக்கின்றன.

இந்த புதிய ஆராய்ச்சியில் சேர்க்கும் ஒரு முக்கியமான புதிய நிகழ்வும் உள்ளது. 1104 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தின் ஹெக்லா எரிமலை வெடிப்பின் விளைவாக கந்தக செறிவு அதிகரிப்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகள் கருதினாலும், ஸ்பைக் அதற்கு பதிலாக " 1108 மற்றும் 1110 க்கு இடையில் நிகழ்ந்த பல நெருக்கமான எரிமலை வெடிப்புகளின் பங்களிப்பை" பிரதிபலிக்கிறது என்று இக் குழு கூறுகிறது. இவை 1108 இல் ஜப்பானின் ஆசாமா மலையின் எரிமலை வெடிப்புகள் என்று நம்பப்படுகிறது.
சந்திரன் முழுவதும் மறைந்த இந்த செயலின் காரணத்தைக் கண்டறிய, இக்குழு அந்த நிகழ்வுக்கு ஒத்திருக்கக்கூடிய இருண்ட சந்திர கிரகணங்களின் விளக்கங்களுக்கான இடைக்கால பதிவுகளைப் பார்த்தது.
"குறிப்பாக, அடுக்கு மண்டலத்தில் எரிமலை ஏரோசோல்களைக் கண்டறிவதற்கும், பெரிய வெடிப்புகளைத் தொடர்ந்து அடுக்கு மண்டல ஒளியியல் ஆழங்களை அளவிடுவதற்கும் சந்திர கிரகணங்களின் பிரகாசம் பயன்படுத்தப்படலாம்" என்று இக்குழு அறிக்கையில் குறிப்பிடுகிறது.

இக்கண்டுபிடிப்புகள் இன்னும் இந்நிகழ்விற்கான உறுதியான ஆதாரமாக தகுதி பெறவில்லை என்றாலும், சிதறிகிடக்கும் பல தகவல் துண்டுகள் பொருந்துகின்றன என்பதைக் காணலாம். நீண்ட காலமாக மறந்துபோன எரிமலை வெடிப்புகள் காரணமாக நிலவு இரவு வானத்திலிருந்து மறைந்து போவதை இந்த ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது.

சந்திர நிகழ்வுகள் பழங்காலத்திலிருந்தே பதிவு செய்யப்பட்ட சான்றுகளாக மாறும். எல்லாவற்றிற்கும் மேலாக, இரவின் இருளில் ஒளியின் ஒரு உண்மையான ஆதாரம் கவனத்தை ஈர்க்கும். இன்றிரவு வானத்தின் சூப்பர்மூன் அல்லது "ப்ளவர்" மூன் இந்த ஆண்டு கடைசியாக தோன்றுவது ஆகும். எனவே நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதற்குப் பிறகு அடுத்த சந்திர நிகழ்வு, ஜூன் 5 முதல் ஜூன் 6 வரை நடைபெறும் ஒரு பெனும்பிரல் சந்திர கிரகணம் (பகுதி) ஆகும்.
News Source: indiatimes.com


Click it and Unblock the Notifications