"மெய்யான அதிசயம்" : அழுக்கு நீரை குடிநீராய் மாற்ற முடியும்..!
ஏரிகள், ஆறுகள், கடல்கள், நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி என அனைத்து வகையான நீர் நிலைகளிலும் ஏற்படும் கலப்படமே நீர் மாசு எனப்படும். இந்த மாசுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தீங்கு சேர்மங்கள், நீக்க படாத கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கும் போது ஏற்படுகிறது.
இதன் விளைவாக வருங்காலத்தில் குடிநீர் பஞ்ச நிலை ஏற்படும், அதை மனதிற்க் கொண்டே பல ஆராய்ச்சியாளர்கள் குடிக்கத் தகுந்த நீர் உருவாக்கத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்மாதிரியான ஒரு ஆய்வில் தான் "மெய்யான அதிசயம்" ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது..!

புதிய வடிகட்டி :
எதிர்காலத்தில் மிகவும் உதவும் வண்ணம், அழுக்கு நீரை குடிக்கக்கூடிய நீராய் மாற்றிவிடும் ஒரு புதிய வடிகட்டியை விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

கிராபென் ஆக்சைடு தாள் :
செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் படி நீரை வெளியேற்றும் இந்த வடிகட்டி பொருளான கிராபென் ஆக்சைடு தாள்களை ஒரு "அதிசய வடிகட்டி பொருள்" என்கின்றனர்.

அதிசய வேலை :
கிராபென் ஆக்சைடு தாள்கள் ஒரு நல்ல வெப்பம் மற்றும் மின்சார கடத்தி என்பதால் தான் அசுத்தமான நீரை தண்ணீராக மாற்றும் அதிசய வேலையை நிகழ்த்துகிறது.

இந்தியா போன்ற நாடு :
"போதிய சூரிய ஒளி கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் அழுக்கு நீரை எடுத்து கிராபென் ஆக்சைடு தாள்களை பயன்படுத்தி ஆவியாக்கி குடி நீரை சேகரிக்க முடியும்" என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கலவை :
பாக்டீரியா தயாரிக்கும் செல்லுலோஸ் ஆன சூரிய ஒளி, கிராபென் ஆக்சைடு கொண்ட இரு அடுக்கு பயோபாரம் இந்த இரண்டு கலவையும் தான் உப்பு நீர் அல்லது அசுத்தமான நீரை குடிக்கத்தகுந்த நீராக மாற்றுகிறது.

பஞ்சு போல் :
இரு அடுக்கு பயோபார்ம் அடியில் இருக்கும் செல்லுலோஸ்கள் பஞ்சு போல் செயல்பட்டு அசுத்த நீரின் எச்சம் அல்லது உப்புக்களை பிரித்து எடுக்கிறது.

மேலும் படிக்க :
நம்பினால் நம்புங்கள் : இவர்களுக்கெல்லாம் 'இன்னொரு முகம்' இருக்கு..!
1700 முதல் 1979 வரை : நிஜமாகிப்போன புனைக்கதை கணிப்புகள்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications